BENGALURU - GARDEN CONCRETE GARBAGE CITY
Happen to watch this video https://youtu.be/lV7s_aks_4A?si=kvolxMhY-n0dbJtU on Bengaluru City's destruction in the name of development. Thoughts overwhelmed and poured out as a rhyme.
Contemporary Life Critique சமூக வாழ்க்கை விமர்சகன்
BENGALURU - GARDEN CONCRETE GARBAGE CITY
Happen to watch this video https://youtu.be/lV7s_aks_4A?si=kvolxMhY-n0dbJtU on Bengaluru City's destruction in the name of development. Thoughts overwhelmed and poured out as a rhyme.
ஆ !!! சிறியரே !!!
ஆ !! சிறியரே !!
அறத்து பால் ஊட்ட வேண்டிய ஆசிரியரும்
பொருட்பால் ஈட்ட வேண்டிய அரசியலும்
அறத்துக்கு அப்பால் போனதால்
காமத்துப்பால் பொங்குகிறது
வள்ளுவன் ஊரில்
கல்வி கற்பிக்க வேண்டியவன்
கலவி கற்பிக்க துணிந்ததால்
பள்ளிகளின் அறைகள்
பள்ளியறை ஆனதோ ??
தெருவில் திரியும் நாய்கள் கூட
பெண் விரும்பாமல்
இணைய முனைவதில்லை
அறிவை திறக்க வேண்டியவன்
ஆடையை திறக்க வருவானோ ??
கல்வி தந்தை ஆனதினால்
"அப்பப்பா இது தப்பப்பா"
அலறுது பல சின்ன பாப்பா
"அப்பா ! உனக்கு
கேக்கலையா அப்பா !!"
ஆ ! சிறியரே !!
"ரி" என்ற இடை இனத்தை"றி" என்று வல் இனமாய்
உடல் வலிமை
மட்டுமே ஆண்மையா ?
அம்மணமாய் அமர்ந்தாலும்
உணர்ச்சிகளை வென்றவனே
மகாவீரன் !!!!
பெண் என்பது வெறும் ஓட்டை அல்ல
வந்து ஓட்டை போட
மாதம் ஆயிரம்
தந்துவிட்டு
மானபங்கம்
செய்வதற்கு
பொறுத்தது போதும்
பொங்கி எழு
முறத்தால்
சிங்கம் விரட்டிய நீ
தீரத்தால்
அசிங்கம் துரத்தி அடி
கற்பித்தல் மட்டுமே ஆசிரியர் பணி
கற்பழித்தல் ஆ ! சிறிய பணி
நச்சு பாம்பு சில நூறு
நசுக்கவே வேண்டியது
நம் பொறுப்பு
சகிருட்டிஸ்
sakritease 11 March 2025
1 மார்ச் 2025 " அப்பப்பா " என்று உலகமே வியந்த "ஏழிசை வேந்தர்" " முதல் சூப்பர் ஸ்டார்" பிறந்த நாள்
சகிருட்டிஸ்
sakritease March 2025
Sanskrit's Mother Tongue is Tamizh
தலைப்பை பார்த்ததும் குழப்பமா ?
ஓரு மொழிக்கு இன்னொரு மொழி எப்படி தாய் மொழியாகும் ?
ஒரு மொழி முதலில் உருவாகி அதன் பின் மற்றொரு மொழி காலத்தின் பரிணாம வளர்ச்சியால் அந்த மொழியின் திரிபு - வேறொரு மொழியாக உருவகம் பெறுகிறது.
உலகின் முதல் மொழி சைகை மொழியாக இருந்து அதன் பிறகு ஓவிய மொழியாகி பின்பு இலக்கண மொழியாக உருவெடுத்து அதன் பின்னே சில கால நிலை மாற்றத்தின் தேவைக்கு கேற்ப சில பூகோள ரீதியான அமைப்புகளினாலும் பல புது மொழிகள் அவற்றின் இலக்கணங்கள் உருவாகின.
இதில் தமிழ் முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு அதிகம். சமஸ்கிருதமும் தமிழும் ஒலி அளவில் ஒரே அமைப்பை கொண்டவை.
தமிழில் "க்" பிறகு "ங்" ஆனால் சமஸ்கிருதத்தில் இந்த இரண்டு எழுத்துகளுக்கும் இடையில் "க்" என்பதன் மூன்று அகல விகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது போல் தான் "ச்" "ஞ்" இடையிலும், "ட்""ண்", "த்" "ந்", "ப்""ம்" க்கு இடையிலும். அதே போல் "அ" முதல் "ஃ" உள்ள உயிர் எழுத்தகளிலும் அதே அமைப்பு அங்கங்கே சில ஒலி வேறுபாடுகளுக்காக மேலும் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்த சில ஒலி கூட்டல்கள் மற்றும் எழுத்துக்களை அதிகரித்துள்ளார்கள்.
தமிழ் 20,000 ஆண்டுகள் பழைமையானது
பரந்தூர் சென்ற விஜயை வாழ்த்துவோம் :
கடந்த 900 நாட்களுக்கு மேலாக தங்கள் விவசாய நிலத்தையும் தங்கள் நீர் நிலைகளிலும் சென்னை பசுமை விமான நிலையத்திற்கு தாரை வார்க்க கூடாது என்று ஜன நாயக முறையில் அற வழியில் போராடும் கிராம மக்களை மாநில அரசோ மத்திய அரசோ கண்டுக் கொள்ளவில்லை. விவசாயமும் தண்ணீரும் வேண்டாம் , நாங்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வர விமான நிலையமே தேவை என்று நினைக்கும் மக்களும், அரசியல்வாதிகளும் உள்ள ஒரு நாட்டில் புதியதாக த. வெ.க அரசியல் கட்சி தொடங்கியவர் வருகிறார் என்பது ஒரு நல்ல முன்னெடுப்பு.
விஜய் இதனை ஒரு அரசியல் ஸ்டண்ட் ஆகவே செய்தாலும் ஒரு உண்மையான விவசாயிகளின் போராட்டத்தின் மீது சில மணி நேரமாவது மீடியாவின் வெளிச்சம் விழும்.
தண்ணீரும் தமிழ்நாடும் :
தண்ணீர் பற்றாக்குறையால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா உடன் நெடுநாட்களாக போராடும் தமிழகம், எப்படி இருக்கும் நீர் ஆதாரங்களையும் இழக்க துணிகிறது?
எது நம்மிடம் இல்லையோ எது நமக்கு மிக அவசியமோ, அதை நாம் காப்பாற்றுவதில் கவனம் தேவையா ? இல்லையா?
விமானங்கள் பறக்காவிட்டாலும் நாம் வாழலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியுமா ?
எது வளர்ச்சி எது வீக்கம் என்ற முதிர்ச்சி நம்மிடம் இல்லை.
கடந்த 50 வருட தமிழ் நாடு அரசியலுக்கு வந்தவர்கள் மிக பெரும்பான்மையானவர்கள் ஆற்று மணலை விற்று தான் பெரும் பணம் ஈட்டியுள்ளார்கள். இதனால் தான் தமிழ்நாட்டில் எந்த ஆறிலும் தண்ணீர் ஓடக் கூடாது என்று தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் விரும்புகிறார்கள் மற்ற மாநில அரசியல்வாதியை காட்டிலும்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு , ஏரிகள் ஆக்கிரமிப்பு சென்னையில் மழைக் காலங்களில் வெள்ளம் வந்து வருடா வருடம் திண்டாட்டம். நீரை எந்த விதத்திலும் சரியாக கையாள தெரியாத தமிழகம், மேலும் மேலும் நீர் ஆதாரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்துக் கொண்டே போவதில் யாருக்கு நன்மை??
தாகத்திற்கு தண்ணீரும் உண்பதற்கு உணவும் தானே வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை ??? அதுவும் விளை நிலங்கள் தான் வேண்டும் என்று இத்தனை அடக்குமுறைகளை அரசாங்கம் நியாயமான உரிமை போராட்டத்தை அடக்குகிறது.
வறண்ட புல்லு கூட முளைக்காத எத்தனை நிலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அதை விடுத்து ஏன் மூன்று போகம் விளையும் விவசாய நிலமே விமானம் பறக்க வேண்டும் என்று ஏன் பிடுங்க வேண்டும்.?
சென்னை நகரை விட்டு வெளியேற வேண்டிய நேரமிது
தமிழ்நாட்டின் வட கிழக்கில் இருப்பதாலேயே சென்னை தலை நகராக இருப்பதன் தகுதியை இழக்கிறது. அதுவும் தவிர பருவ நிலை மாற்றத்தினால் கடல் உயர்ந்து வருவதால் சென்னை நகரின் பல பகுதிகள் நீருக்கடியில் முழுகும் அபாயத்தில் உள்ளது.
தமிழ் நாட்டின் தலை நகரை மாநிலத்தின் மத்தியில் திருச்சி போன்ற நகருக்கு அருகே நீர் நிலைகள், விவசாய நிலங்கள், மலைகள் போன்ற இயற்கை வளங்களை அழிக்காமல் ஒரு புது விமான நிலத்தை எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களில் புதிய விமான நிலையத்தை அமைத்து அதன் அருகே புதிய தலை நகரத்தையும் உருவாக்க வேண்டும்.
இரண்டாவது செய்தி: நடிகர் திரு அஜித் குமார் துபாயில் நடந்த அதி வேக கார் பந்தயத்தில் மூன்றாவதாக வந்து ஜெயித்த விஷயம்.
இன்று 23 ஜன் 2025 - உலகத்தையே தன் தாக்கத்தினால் மிரளச் செய்து பின் முக்கிய தருணத்தில் ஆன்மீக பேரொளியாக மாறிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள். நாட்டிற்காக உடல் துறக்கலாம் ஆனால் சாலையில் தேவையில்லாமல் வேகமாக சென்று உடல் உறுப்பு தானம் செய்யும் நிலைக்கு நம் வாழ்வை வீணடிக்க கூடாது என்று நினைவு கூறும் நாள்.
சகிருட்டிஸ்
Sakritease 23 Jan 2025