A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Tuesday, April 1, 2025

BENGALURU - GARDEN CONCRETE GARBAGE CITY

 BENGALURU - GARDEN CONCRETE GARBAGE CITY

Happen to watch this video https://youtu.be/lV7s_aks_4A?si=kvolxMhY-n0dbJtU on Bengaluru City's destruction in the name of development. Thoughts overwhelmed and poured out as a rhyme. 




Ruins of Bengaluru
Has begun
Reins of Corrupt
Corporators 
Rains of concrete
Pouring in
Drains of public money
Rooted to private
Coffers 
Run baby Run
Cities den

Rurals have some 
Water & Air
With less money
But more honey
From wilderness
Of trees


Bengaluru, you may
Need a PUTIN 
to rain you like Ukraine

At least Chennai has a 
Russian Dictator in name
 & sons are holding reins
None can stall in
 till it ruins

Vacate cities
Village could ease

Vacant lands are 
For sale 




Nothing even left in space
WILL I AM SUN IT A(LL) ??
Whose triumph it is? 
Who is going to Trump at it ? 

NOT an Yahoo! Moment Benjamin
Ye ! men How is this ?
I ran away from Tariff
War with Donald



" Sab ka saath
Sab ka vanvaas "
Murmured Draupadi
Pandavas lost Indra 
Prastha Now Delhi 

Development is game
Of Dice from days
Of Maha Bharat 

 Demons like 
Duryodhana
Come in Hundreds
To rule 
Born to vision less father
Born to vision closed
Mother 
With a ₹2000 note
Per Month
As Mahila Sam(e)man 

Kalakkattu Kavirayar
for
sakritease

- 31 March 2025

P.S. : 
1. Sab ka vanvaas actually means forest living. All our ancient saints acquired wisdom by living in forest. Even ancient scriptures like Vedas makes" forest living" as "Aranyakam" as mandatory for human evolution as it encompasses co-existence with bio diversity. Pain in this poem is to reflect the loss of greenery in the name of development as Cities. It is the cities which are barbaric against social equanimity in sharing natural resources. Even the wars couldn't do long term damage as much as the in the name of development what we are doing.

2. Mahila samman - is a Hindi term as a complimentary free bonus to women offered in many states in India Today in the name of welfare measure. "Samman" denotes offering with dignity. Actually in African way of natural forest living , all encompassing term "Ubuntu" - "I am what we are " evolved. Collective living without any gender bias is the need of the hour. But in India at this point of time, political parties in India are offering this monthly compensation to lure women voters to vote their party to power. In this process, women are not able to hold a long term vision for the nation. So every Woman , who take this money is a , Kandhari, the blind folded queen of Maha Bharata. 

3. "Kalakkaattu" in Tamil means wild forest grown without any regimental agriculture practices.  Nothing & No one is considered as a weed in this wild forest. Every beings existence is taken care of by that Mother Nature & That is where " poetry" begins "Kavi-rayar" 

4. Murmured Draupadi - The best thing happened in India after a very long time, a woman of tribal origins becoming the Ceremonial head of the state. But Nature always has a plan behind every thing that happens. It is not just coincindence - She is also named after Mother Draupadi.  India's fortunes will change when it is ruled from atop the hill. The Parvati, is that daughter of that Hill, which is Parvata. As a poet kalidasa in his "Mega sandesha" - described clouds as the messenger, its message is abundant flow of river originating from a Hill. Thats the symbol of prosperity - that can only bring lasting peace.    " sab ka saath Sab ka vanvass "when that will be uttered by Her excellency shall be right term to make this whole country a beautiful forest. So losing a beautiful Garden city, Bengaluru, is really painful, which made the author right this Rhyme. 



Tuesday, March 11, 2025

ஆ ஆ !! சிறியரே !!

 ஆ !!! சிறியரே !!!


ஆ !! சிறியரே !!

அறத்து பால் ஊட்ட வேண்டிய ஆசிரியரும்

பொருட்பால் ஈட்ட வேண்டிய அரசியலும்

அறத்துக்கு அப்பால் போனதால்

காமத்துப்பால் பொங்குகிறது

வள்ளுவன் ஊரில்


கல்வி கற்பிக்க வேண்டியவன்

கலவி கற்பிக்க துணிந்ததால்

பள்ளிகளின் அறைகள் 

பள்ளியறை ஆனதோ ??


தெருவில் திரியும் நாய்கள் கூட


பெண் விரும்பாமல்

இணைய முனைவதில்லை

அறிவை திறக்க வேண்டியவன்

ஆடையை திறக்க வருவானோ ??



சாராய ஆலை அதிபரெல்லாம்

கல்வி தந்தை ஆனதினால்

"அப்பப்பா இது தப்பப்பா"

அலறுது பல சின்ன பாப்பா

"அப்பா ! உனக்கு

கேக்கலையா அப்பா !!"


ஆ ! சிறியரே !!

"ரி" என்ற இடை இனத்தை

"றி" என்று வல் இனமாய்

உடல் வலிமை

மட்டுமே ஆண்மையா ? 

அம்மணமாய் அமர்ந்தாலும்

உணர்ச்சிகளை வென்றவனே

மகாவீரன் !!!!


பெண் என்பது வெறும் ஓட்டை அல்ல


நீ அனுப்பும் ஓட்டை பஸ்சில்

வந்து ஓட்டை போட

மாதம் ஆயிரம் 

தந்துவிட்டு

மானபங்கம்

செய்வதற்கு 


பொறுத்தது போதும்

பொங்கி எழு

முறத்தால்

சிங்கம் விரட்டிய நீ

தீரத்தால்

அசிங்கம் துரத்தி அடி


கற்பித்தல் மட்டுமே ஆசிரியர் பணி 

கற்பழித்தல் ஆ ! சிறிய பணி


நல்லதோர் ஆசிரியர் நாலாயிரம்

நச்சு பாம்பு சில நூறு

நசுக்கவே வேண்டியது

நம் பொறுப்பு



சகிருட்டிஸ்

sakritease 11 March 2025



Friday, March 7, 2025

கொளத்தூர் கண்ணம்மா Kolathur Kannamma


கொளத்தூர் கண்ணம்மா

அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே
சரணடைந்த நீயே

2018 நாம் கூடி ஊழலை ஒழிப்போம்
என்ற நீதி மய்யம் கண்ட நீயே,
 இன்று நீ குறில் ஆகி 
நிதி மையத்தில் 
உட்காந்து கை கூப்ப வச்சுடுச்சே

மூன்றாம் பிறையில்
"நீல நிற சாயம்பட்ட குள்ள நரி கால் தவறி விழுந்த தடி சின்ன பொம்பள " அன்றே உங்க சொந்த குரலில் பாடினீங்க.
அப்படியே " கலரு மாறிப் போச்சு அது காடு தேடி போச்சு " அப்பவே "பாடி"ய நீங்கள் " யாரென்று தெரிகிறதா " என்று உங்க " விஸ்வரூபம்" காண்பிச்சீங்க. 

ஆனா உங்க அடிப்படை கொள்கை யான " யார் காதிலும் பூ சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன்"  என்ற நீங்கள். 
எப்பவும் நீங்க "நம்மவர்" ன்னு நினைச்சவங்கள          " தெனாலி" ஆக்கி போட்டு நீங்கள் என்றென்றும் " வசூல் ராஜா " என்று நிரூபித்து விட்டீர்கள் 

சகிருட்டிஸ் 
sakritease March 2025


 

Thursday, March 6, 2025

அப்பப்பா MK Thiagaraja Bhagavathar

 

1 மார்ச் 2025 " அப்பப்பா " என்று உலகமே வியந்த "ஏழிசை வேந்தர்" " முதல் சூப்பர் ஸ்டார்" பிறந்த நாள்

தான் சம்பாதித்த அனைத்தையும் தானமாக அளித்தவர்

அட்சர சுத்தமாக 5 மொழிகளை பாடும் திறமை அதிலும் "தமிழிசை" வளர்த்த விஸ்வகர்மா வான தட்டான் வீட்டுல் பிறந்து தங்க தட்டில் உணவு உண்டும் எளிமையாக வாழ்ந்த உன்னதர் 🙏🙏🙏


சகிருட்டிஸ்

sakritease March 2025

Tuesday, March 4, 2025

சமஸ்கிருதத்தின் தாய் மொழி தமிழ் Sanskrit's Mother Tongue is Tamizh

 சமஸ்கிருதத்தின் தாய் மொழி தமிழ் 

Sanskrit's Mother Tongue is Tamizh

தலைப்பை பார்த்ததும் குழப்பமா ?

ஓரு மொழிக்கு இன்னொரு மொழி எப்படி தாய் மொழியாகும் ?

ஒரு மொழி முதலில் உருவாகி அதன் பின் மற்றொரு மொழி காலத்தின் பரிணாம வளர்ச்சியால் அந்த மொழியின் திரிபு - வேறொரு மொழியாக உருவகம் பெறுகிறது.

உலகின் முதல் மொழி சைகை மொழியாக இருந்து அதன் பிறகு ஓவிய மொழியாகி பின்பு இலக்கண மொழியாக உருவெடுத்து அதன் பின்னே சில கால நிலை மாற்றத்தின் தேவைக்கு கேற்ப சில பூகோள ரீதியான அமைப்புகளினாலும் பல புது மொழிகள் அவற்றின் இலக்கணங்கள் உருவாகின.

இதில் தமிழ் முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு அதிகம். சமஸ்கிருதமும் தமிழும் ஒலி அளவில் ஒரே அமைப்பை கொண்டவை. 


தமிழில் "க்" பிறகு "ங்" ஆனால் சமஸ்கிருதத்தில் இந்த இரண்டு எழுத்துகளுக்கும் இடையில் "க்" என்பதன் மூன்று அகல விகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது போல் தான் "ச்" "ஞ்" இடையிலும், "ட்""ண்", "த்" "ந்", "ப்""ம்" க்கு இடையிலும்.  அதே போல் "அ" முதல் "ஃ" உள்ள உயிர் எழுத்தகளிலும் அதே அமைப்பு அங்கங்கே சில ஒலி வேறுபாடுகளுக்காக மேலும் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்த சில ஒலி கூட்டல்கள் மற்றும் எழுத்துக்களை அதிகரித்துள்ளார்கள். 

தமிழ் 20,000 ஆண்டுகள் பழைமையானது 


என்ன ஒரேடியா ஒரு கப்ஸாவை அடித்து விடுகிறீர்களா ? என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. இப்பொது தானே தமிழ் நாகரீகம் 5000 ஆண்டுகள் இரும்பை பயன்படுத்திய நாகரீகம் என்ற செய்தி வந்ததே என்றால். இன்னமும் நாம் கீழடியில் 2000 வருடத்திற்கு முந்தைய ஆராய்ச்சி என்று சொல்லி வந்து 5000 வருட பழைமை என்று பேச தொடங்கும் வேளையில், தமிழர் நாகரீகத்தை தேட வேண்டிய இடம் குமரிக் கடல் - இன்றைய பெருங்கடலில் இன்றைய இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா என்று முன்று கண்டங்களையும் இணைத்த நிலப்பரப்பு இன்று நீருக்குள். " லெமூரியா" என்றும் "குமரிக் கண்டம்" என்றும் குறிப்பிடபடுகிறது.

அப்பறம் எதற்கு சமஸ்கிருதம் ?? 
இன்று கடலுக்கு அடியில் இருக்கும் லெமூரியாவை பற்றி "லெமூரியன் ஸ்க்ரொல்ஸ்" என்ற புத்தகத்தில் சிவாய சுப்பிரமுனிய சுவாமி என்கிற குவாய் தீவின் சைவ மட ஆதீனம் எழுதியுள்ளார். சைவ சித்தாந்தகாரர்கள் எப்பவும் சிவன் ஆட்சி செய்தார் என்றெல்லாம் எழுதுபவர்கள் தானே என்று அலட்சியமாக நாம் ஒதுக்க நினைத்தால், இந்த சைவ சித்தாந்தவதி ஒரு இந்தியரே அல்லர். அவர் பிறப்பால் அமெரிக்கர், அதுவும் ஹவாய் தீவுகளில் பிறந்து இலங்கை யாழ்பாணம் வந்து அவருடைய குருநாதர் திருமிகு யோக சுவாமி அவர்களிடம் சைவ சித்தாந்த தீட்சை பெற்று இன்று உலகிலேயே மிகப் பெரிய கோவிலை குவாய் தீவில் கட்டியுள்ளார்.

அவர் மொழிகளை பற்றி குறிப்பிடுகையில் பூமியின் அதிவலைகளுக்கு ஏற்றாற் போல் பல்வேறு காலகட்டங்களில் பல் வேறு ஊர்களில் பல மொழிகள் தோன்றியதாக குறிப்பிட்டு, தமிழ் இயங்கி வந்த ஒலி அமைப்பை தாண்டி மேலும் நுணுக்கமான ஒலிகள் தேவைப்பட்ட காலம் வந்த போது சமஸ்கிருதம் உருவானதாக தெரிவிக்கிறார். 

பூமி அதிரும் நுண்ணலைகளுடன் நம்ம எண்ண அலைகளையும் ஒருங்கிணைப்பதே தவம் என்கிறார். இன்றைய காலக்கட்டத்திற்கு பூமியின் ஒலி அதிர்வுகள் ஏற்றாற் போல் வேறு ஒரு புது மொழியும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தபடுவதாக குவாய் சுவாமி தெரிவிக்கிறார். 


வரும் காலத்தில் பூமியின் அதிர்வலைகள் மாறினால் மேலும் பல புது மொழிகள் வந்தே தீரும். இது பரிணாம வளர்ச்சி தத்துவமாகும். இது இயற்கை நியதி. 

குழந்தை பிறந்து 5 வயதிற்குள் அவர்களால் 70 மொழி கூட கற்க முடியும்

ஆராய்ச்சியாளர்கள் சிறு குழந்தைகளால் பல்வேறு மொழிகளை மிக எளிதாக கற்க முடியும் என்கிறார்கள். மனிதர்களின் மொழி மட்டும் அல்லாது பல குழந்தைகளும் பூனைகளை பார்த்து 'மியாவ்" என்பதும் "காகா" என்று காக்கைகளை பார்த்து கத்துவதும் அவர்களின் கற்கும் ஆர்வ வெளிப்பாடே. இன்றும் சிலரால் மரங்களுடன் கூட பேச முடிகிறது.

குறுகிய வட்ட அரசியல்வாதிகளுக்கு மட்டுமே மொழி போர்

இன்றைய குறுகிய கண்ணோட்ட அரசியல்
வாதிகள் மட்டுமே தன் பிள்ளைகளை தவிர மற்ற பிள்ளைகளுக்கு அதிகம் உலக அறிவு வரக் கூடாது என்று குயுக்தியால் இரு மொழி கொள்கை என்று பேசுகிறார்கள். ஆனால் அதிக மொழிகள் தெரிய அதுவும் மிருகங்களின்
மொழிகளையும் தெரிந்து கொள்பவர்களால் மாற்று சிந்தனைகளையும் வன்முறை இன்றி ஏற்றுக் கொள்ள முடியும். உலகம் அப்போது தான் அமைதியுடன் வாழ முடியும். "ஹிந்தி" மட்டுமே போதும் என்று நினைக்கும் வட இந்திய கோமாளிகளுக்கும் இது பொருந்தும். 

பல மொழிகளை தெரிந்த பின் பாரதியார் "தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றார். ஆனால் இன்றைய தமிழ் நாட்டில் பல தமிழர்களுக்கு தமிழே சரிவர எழுத படிக்க தெரியவில்லை. 8 வது படிக்கும் பல மா
ணவர்களுக்கு இன்னமும் சரியாக எழுத படிக்க தெரிவதில்லை என்பதே யதார்த்த நிலைமை. அப்படிபட்ட பிள்ளைகள் "தமிழ் எங்கள் உயிர் மூச்சு
" என்று எப்படி கூற முடியும். 
 
பல மொழிகள் ஆறிந்தால் தன்னம்பிக்கை கூடும்
 இன்று கூகுள் நிறுவனத்தின் தலைவர் திரு. சுந்தர் பிச்சை, தமிழ் மட்டும் தெரிந்து கொண்டு அமெரிக்காவில் சென்று கொடி நாட்டவில்லை, மக்கள் பேசும் மொழிகளையும் கற்று கணிணி பேசும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றதால் தான் அவர் உச்சத்தை தொட்டுள்ளார். தாய் மொழி தமிழை தெளிவாக "கசடற" கற்க வேண்டும், அதுவும் தவிர "இசை" உட்பட பல்வேறு மொழிகள் கற்க வேண்டும்.  
வெறும் "தமிள்" "தமிள்" என்று உணர்ச்சி வசப்பட்டால் தமிழ் நாட்டில் கூட "பிச்சை" கிடைக்காது. 

இது வாட்சப், இன்ஸ்டா என்ற சமூக ஊடக காலத்தில் குகை மனிதனின் பொம்மை வரையும் "எமொஜி" க்கள் மொழியும் எல்லோருக்கும் தெரிகிறது. 

எந்த மொழியாலும் எந்த மொழியும் அழியாது அந்த மொழியின் ஆழம் இருக்கும் வரை. 20,000 ஆண்டுகளுக்கு முன்பே "சங்கம்" அமைத்து உலகத்தின் அனைத்து மொழிகளுக்கும் "சங்க" என்ற சொல் கொடுத்த தமிழ்,அனைவரையும் ஒற்றுமையாக வாழ வைக்க சொல்லி கொடுத்த தமிழை கொண்டு "பிரித்தாளும்" சொல் வீச்சு வேண்டாம். 

முதன் முதல் தோன்றிய மொழிக் கூட அது தோன்றிய வடிவத்தில் இல்லை. பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளானது. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும் எழுத்து வேறானாலும் அதன் உயிர் எழுத்துகளின் மெய் எழுத்தகளின் ஒலி அமைப்பு ஒன்று போலவே உள்ளது என்பதே நிஜம். இவையும் பல மாறுதல்களுக்கு உள்ளாகும். மாற்றத்தை ஏற்போம்.
அதுவும் வர இருக்கும் பருவ நிலை மாற்றங்களினால் பேசும் வழக்கு மொழிகளும் மாறும். 

சகிருட்டிஸ்
Sakritease 
4.3.2025




Wednesday, January 22, 2025

Hail Vijay Fail Ajith விஜயை போற்றுவோம் அஜித்தை தூற்றுவோம்


 இந்த வாரத்தில் நடந்த  செய்திகள் இரண்டு:


பரந்தூர் சென்ற விஜயை வாழ்த்துவோம் :

கடந்த 900 நாட்களுக்கு மேலாக தங்கள் விவசாய நிலத்தையும் தங்கள் நீர் நிலைகளிலும் சென்னை பசுமை விமான நிலையத்திற்கு தாரை வார்க்க கூடாது என்று ஜன நாயக முறையில் அற வழியில் போராடும் கிராம மக்களை மாநில அரசோ மத்திய அரசோ கண்டுக் கொள்ளவில்லை. விவசாயமும் தண்ணீரும் வேண்டாம் , நாங்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வர விமான நிலையமே தேவை என்று நினைக்கும் மக்களும், அரசியல்வாதிகளும் உள்ள ஒரு நாட்டில் புதியதாக த. வெ.க அரசியல் கட்சி தொடங்கியவர் வருகிறார் என்பது ஒரு நல்ல முன்னெடுப்பு.


விஜய் இதனை ஒரு அரசியல் ஸ்டண்ட் ஆகவே செய்தாலும் ஒரு உண்மையான விவசாயிகளின் போராட்டத்தின் மீது சில மணி நேரமாவது மீடியாவின் வெளிச்சம் விழும். 


தண்ணீரும் தமிழ்நாடும் : 


தண்ணீர் பற்றாக்குறையால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா உடன் நெடுநாட்களாக போராடும் தமிழகம், எப்படி இருக்கும் நீர் ஆதாரங்களையும் இழக்க துணிகிறது?


எது நம்மிடம் இல்லையோ எது நமக்கு மிக அவசியமோ, அதை நாம் காப்பாற்றுவதில் கவனம் தேவையா ? இல்லையா?


விமானங்கள் பறக்காவிட்டாலும் நாம் வாழலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியுமா ?


எது வளர்ச்சி எது வீக்கம் என்ற முதிர்ச்சி நம்மிடம் இல்லை.


கடந்த 50 வருட தமிழ் நாடு அரசியலுக்கு வந்தவர்கள் மிக பெரும்பான்மையானவர்கள் ஆற்று மணலை விற்று தான் பெரும் பணம் ஈட்டியுள்ளார்கள். இதனால் தான் தமிழ்நாட்டில் எந்த ஆறிலும் தண்ணீர் ஓடக் கூடாது என்று தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் விரும்புகிறார்கள் மற்ற மாநில அரசியல்வாதியை காட்டிலும். 


பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு , ஏரிகள் ஆக்கிரமிப்பு சென்னையில் மழைக் காலங்களில் வெள்ளம் வந்து வருடா வருடம் திண்டாட்டம். நீரை எந்த விதத்திலும்  சரியாக கையாள தெரியாத தமிழகம், மேலும் மேலும் நீர் ஆதாரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்துக் கொண்டே போவதில் யாருக்கு நன்மை??



தாகத்திற்கு தண்ணீரும் உண்பதற்கு உணவும் தானே வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை ??? அதுவும் விளை நிலங்கள் தான் வேண்டும் என்று இத்தனை அடக்குமுறைகளை அரசாங்கம் நியாயமான உரிமை போராட்டத்தை அடக்குகிறது. 

வறண்ட புல்லு கூட முளைக்காத எத்தனை நிலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன.  அதை விடுத்து ஏன் மூன்று போகம் விளையும் விவசாய நிலமே விமானம் பறக்க வேண்டும் என்று ஏன் பிடுங்க வேண்டும்.?


சென்னை நகரை விட்டு வெளியேற வேண்டிய நேரமிது 

தமிழ்நாட்டின் வட கிழக்கில் இருப்பதாலேயே சென்னை தலை நகராக இருப்பதன் தகுதியை இழக்கிறது. அதுவும் தவிர பருவ நிலை மாற்றத்தினால் கடல் உயர்ந்து வருவதால் சென்னை நகரின் பல பகுதிகள் நீருக்கடியில் முழுகும் அபாயத்தில் உள்ளது. 


தமிழ் நாட்டின் தலை நகரை மாநிலத்தின் மத்தியில் திருச்சி போன்ற நகருக்கு அருகே நீர் நிலைகள், விவசாய நிலங்கள், மலைகள் போன்ற இயற்கை வளங்களை அழிக்காமல் ஒரு புது விமான நிலத்தை எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களில் புதிய விமான நிலையத்தை அமைத்து அதன் அருகே புதிய தலை நகரத்தையும் உருவாக்க வேண்டும். 


இரண்டாவது செய்தி: நடிகர் திரு அஜித் குமார் துபாயில் நடந்த அதி வேக கார் பந்தயத்தில் மூன்றாவதாக வந்து ஜெயித்த விஷயம். 

அஜித் என்றுமே சமூக அளவில் மிக பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடிய மனிதர். அதிலும் இந்த போட்டியை காண வந்த ரசிகர்களிடமும் "அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று கோஷம் போடும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் எப்போ நல்லா வாழப் போறீங்க ?" என்ற மிகப் பொறுப்புள்ள மனிதராக ஒரு கேள்வி கேட்டார்.  

அதே போல் சாலை விபத்தில் அடிபடும் நபர்களை "தயவு செய்து ஆட்டோக்களில் ஏற்றி அனுப்பவதால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி எச்சரிக்கை செய்தியும் கொடுத்தார்" அதுவும் அஜித்தின் நண்பரை இது போல் ஆட்டோவில் ஏற்றி சென்றாதால் அவரின் முதுகு தண்டு வடம் முழுவதுமாக பாதிப்படைந்து அவர் இனிமேல் வாழ் நாள் முழுவதும் செயலிழுந்ததற்காக மிகவும் வருத்தப்படிறிருகிறார். 

ஆனால் அஜித் சார் " சாலை விபத்துகளுக்கு மூலக் காரணமே வேகம் -அதி வேகம் தான் "

அதாவது உங்கள் சொல், சிந்தனை அனைத்தும் உங்கள் ரசிகர்களின், பொது மக்களின் பாதுகாப்பு குறித்து இருக்கிறது. ஆனால் உங்கள் செயல் , ரேஸ் போகும் ஆர்வம் தான் என்றைக்கும் இளைஞர்களை தங்கள் பால் ஈர்க்கிறது. 

இன்று சாதாரணமாக சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகவும் பயத்தில் யார் நம்மை எந்த விதத்தில் எந்த திசையில் இடிப்பார்களோ என்ற பயத்தில் நடக்கும் படியாக அதி வேகத்தில் சைலென்சரை எடுத்து விட்டு லைசென்ஸ் இல்லாமல் பைக்கையும் காரையும் ஓட்டுகிறார்கள். 


இன்று இந்தியா உலகளவில் சாலை விபத்துகளில் முன்னணியில் உள்ளது. சாலை விபத்து இறப்புகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது.
ஏற்கனவே கடந்த 30 ஆண்டுகளாக தங்களை முன் மாதிரியாக கொண்டு பலரும் சாலைகளை ஒரு ரேஸ் டிராக்காகவே நினைத்து வண்டி ஓட்டி தானும் காயம் பட்டு பலரையும் காயப்படுத்தி , கொன்று இன்று இந்தியாவே ஒரு சாலை பாதுகாப்பு அற்ற நாடாக உலகளவில் தலை குனிந்து நிற்பதாக , இந்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி, மிகவும் வெட்கப்படுவதாக வருத்தப்படுகிறார்.


இந்த சூழ்நிலையில் நீங்கள் மிகவும் செலவு பிடிக்கும் அதி பணக்காரர்கள் மட்டுமே விளையாடக் கூடிய "அதி வேக கார் ரேஸ்" பந்தயங்களில் தாங்கள் பங்கு பெற்று வெற்றியும் பெற்றது, சமுதாயத்தில் முக்கியமாக ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களை போல் செலவு செய்ய முடியாமல் இது போன்ற கார் ரேஸுகளில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் உங்கள் ரசிகர்களும் இளைஞர்களும் அனைத்து பொது மக்களும் பயன் படுத்தும் சாலைகளையே ரேஸ் பந்தயமாக நினைத்து வண்டிகளை விரட்டி சக மக்களை கொன்று, முடமாக்கி வருகிறார்கள்.

இதில் நீங்கள் இந்த அதி வேக பந்தயங்களை ஊக்குவிக்கும் விதமாக, உங்கள் திரைபடங்களின் வெற்றிகளின் போது கூட பேட்டி தராத நீங்கள், இந்த வெற்றிக்கு பிறகு மிக உற்சாகமாக பேட்டி தருகிறீர்கள்.  தமிழ் நாடு அரசாங்கம் சென்னையில் கார் ரேஸ் நடத்துவதை பெருமையாக பாராட்டுகிறீர்கள். 

எந்த நாட்டில் ஏற்கனவே பொறுப்பற்ற முறையில் வண்டிகளை ஓட்டுபவர்கள் இருக்கும் நாட்டில், தெருவிற்கு தெரு சாராயம் ஊற்றி கொடுக்கும் நாட்டில் மிக அதி வேகமாக வண்டிகளை ஓட்ட ஊக்கப்படுத்தினால் நாட்டில் ஊனமுறுவோர்களின் எண்ணிக்கையும் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தான் அதிகரிக்கும். வாழ்க்கை என்பது "மங்காத்தா" இல்லை அஜித் குமார். 

ஆனால் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் வீட்டை விட்டு போனவர் வீடு திரும்புவாரா ? என்ற கவலையுடன் எத்தனை "ஷாலினி"க்கள் தினம் தினம் பதறுகிறார்கள்.  இங்கே உங்களை வழியனுப்பி விட்டு உங்களுக்கு விபத்து என்றவுடன் குடும்பத்துடன் துபாய்க்கு பறந்து வருகிறார். 

"விவேகம்" என்பது உங்கள் பட டைட்டில் அளவிற்கு தானா ? 

அனைவரும் மீதும்
அன்பான
அக்கறையுள்ள
அஜித் குமார்

ஆதரவாளர்கள்
அனைவருக்கும்
ஆணையிடுங்கள்
உடனடியாக
ஊரறிய
சபதமெடுங்கள்


"சாலைகள் ரேஸ் டிராக் அல்ல,
நான் சாலையில் பொறுப்புடன் நிதானமாக
வண்டிகளை ஓட்டி
அனைவரையும் பாதுகாப்பேன்" என்று.

அது போல் நீங்களும் அடிக்கடி ரேஸுக்கு போகிறேன்
"வேதாளம்" போல் ஓடிக் கொண்டே இருக்க
உங்கள் "காதலுக்கு மரியாதை" தரும் மனைவிக்கு
"விஸ்வாசுமாக" இருந்து 
"வாலி"யில் வரும் "வில்லன்" 
அஜித்துக்கு குட்பை சொல்லுங்கள் 
உங்கள் "விடாமுயற்சி"க்கு வாழ்த்துக்கள்
உங்கள் "குட் பேட் அக்லியில்" 
சமுதாயத்துக்கான "குட்"டை மட்டுமே
விரும்பும் "சிட்டிசன்"

ஏழை மக்களும் உங்களை பார்த்து எளிமையாக விளையாடக் கூடிய
விளையாட்டுகளை தேர்ந்து எடுத்து  விளையாடுங்கள். உங்கள் மனைவி விரும்பி விளையாடும் "Shuttle Badminton" பூப்பந்து போன்ற அனைவராலும் குறைந்த செலவில் விளையாடக் கூடியதை தேர்ந்து எடுங்கள். 


"பெற்றோரை மதிக்க வேண்டும்" என்று அறிவுரை கூறுவதை காட்டிலும்
நீங்கள் "வாழ்ந்து காட்டி வழிக் காட்டுவது" தான் அனைவருக்கும் அதிகம்
தாக்கத்தை தரும்.

அதனால் உங்கள் கார் ரேஸ் "அட்டகாசங்களுக்கு
இனிமேல் "ரெட்" கார்டு
என்பதை உங்கள் மகள், மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு
உணருங்கள். 

இன்று 23 ஜன் 2025 - உலகத்தையே தன் தாக்கத்தினால் மிரளச் செய்து பின் முக்கிய தருணத்தில் ஆன்மீக பேரொளியாக மாறிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள். நாட்டிற்காக உடல் துறக்கலாம் ஆனால் சாலையில் தேவையில்லாமல் வேகமாக சென்று உடல் உறுப்பு தானம் செய்யும் நிலைக்கு நம் வாழ்வை வீணடிக்க கூடாது என்று நினைவு கூறும் நாள்.


சகிருட்டிஸ்

Sakritease 23 Jan 2025