A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Saturday, September 13, 2025

மனித(நா)னாய் ஒரு போராட்டம்

அன்பான சகிருட்டிஸ் வாசகர்களுக்கு நன்றி.
உணர்வு பூர்வமான எழுத்துக்களை ஆதரிக்கும் அலசி அசை
போடும் அன்பு நண்பர்களின் ஆக்கம் மிகு ஊக்கத்தினால்
நம் சமூகத்தை பாதிக்கும் பல சிந்தனைகளை பற்றி எழுதி வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடை பெற்று வரும் போராட்டத்தை பற்றி நாம் தொடர்ந்து பல்வேறு தளங்களிலும் எழுதி வருகிறோம். சமீபத்தில் தெரு நாய்கள் பற்றிய் சர்சையில் வாசகர்களின் கருத்துக்களை ஆனந்த விகடனின் மின்னிதழில் கேட்டிருந்தார்கள்.

சகிருட்டிஸின் கருத்தை அனுப்பியிருந்தோம். அந்த கருத்தை அவர்கள் இணைய தளத்தில் 

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு! - தெரு நாய்கள் விவகாரத்தில் தேவையான புரிதல் #Straydogissue

 வெளியிட்டுள்ளார்கள். 
அந்த கட்டுரையின் இணைப்பு இதோ :

நமது முழு கட்டுரையையும் வெளியிட்டு உள்ளார்கள்:

அந்த கட்டுரையை நமது தளத்திலும் இங்கே முழுமையாக வழங்கியுள்ளோம்.

தெரு நாய்கள் நகரத்தில் வசிக்கலாமா ? கூடாதா ? 

நாய்களால் கடிக்கப்பட்டவர்கள், துரத்தப்பட்டவர்கள் , பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் நாயை நகரத்தை விட்டு துரத்துவதில் தான் கவனமாக இருப்பார்கள்.

நானும் அப்படித்தான் இருந்தேன். நாய், மாடுகள், பாம்புகள், தவளைகள் , பூனைகள் நகரத்தில் இருக்கக் கூடாது. மனிதர்கள் வாழும் இடங்களில் மற்ற உயிரினங்களால் தொல்லை தான் என்ற நினைப்பில் தான் வாழ்ந்து வந்தேன்.

ஆனால் என் வாழ்க்கையை "பசுமை விகடன்" படிப்பதற்கு முன், பின் என்ற இரு பிரிவுகளாக பிரித்து பார்க்க தொடங்கிவிட்டேன்.

பசுமை விகடனில் நம்மாழ்வார் ஐயா எழுதியதை படித்து விவசாயத்தில் நுழைந்தேன். வயலுக்கு சென்ற பின் அதுவும் இயற்கை வாழ்வியல் என்ற கிராமத்து வாழ்க்கைக்கு சென்ற பின் இன்னும் அதிகமான உயிரினங்களுடன் ஒத்து வாழும் சூழ்நிலைக்கு பழகிக் கொண்டேன்.

அதுவும் பாம்பு, எலி, கீரிப் பிள்ளை, மயில், முயல், குள்ள நரி, காட்டு பன்றி, வளர்ப்பு ஆடு மாடுகள் உட்பட பல உயிர்களுடன் பழகும் வாய்ப்பு. 
இவை அனைத்தும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவை.
இவை அனைத்தையும் அவர்கள் இயல்புடன் ஏற்றுக் கொண்டால் தான் விவசாயம் செய்ய முடியும். 

அதிலும் பாம்பு யாருக்கும் திகில் ஊட்டுபவை. ஆனால் அதுவே மனிதர்களை கண்டால் மிகவும் அச்சப்படும் ஒரு உயிரினம். தன் தற்காப்புக்காகவே சீறும் மற்றும் கொத்தும். இது அதன் இயல்பு. 

அதனால் பாம்புகளுடன் ஒரு மானசீக ஒப்பந்தம் போட்டு கொண்டேன் " நான் உன்னை அடிக்க மாட்டேன் நீ என்னை கடிக்காதே" இது வரைக்கும் நாங்கள் இருவரும் (பாம்புகளும், நாங்களும் ) சத்தியத்தை மீற வில்லை.

அப்படியும் சில சமயம் நம்ம பக்கத்தில் இருக்கும் மனிதருக்கு பயமாக இருந்தால் பாம்புகளை ஒரு பையிலோ, பக்கெட்டிலோ, முறத்திலோ எடுத்து கொண்டு போய் விட்டு விட்டு வந்துவிடுவேன். சக கிராமத்துக்காரர்கள் பலரும் பாம்புகளை அடிக்க வேண்டும் என்று ஆவேசம் காட்டும் போதும் நான் சொல்லும் பதில் " நாம தான் அவங்க இடத்துக்கு வந்திருக்கோம் அவங்க நம்ம இடத்த தேடி வரல" என்பது தான். 

கிராமங்களிலும் நாட்டு நாய்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் காவலுக்கு வளர்க்கிறார்கள். அவை அந்த வீட்டிற்கு மற்ற எந்த உயிரினத்தால் வரக் கூடிய ஆபத்தையும் தடுக்கிறது. நாய் கத்தும் சத்தத்தில், அதிர்வில் பாம்புகள், கீரிகள், நரிகள், பன்றிகள் பின் வாங்கும், சிறு உயிரினங்களை பிடித்து தின்றுவிடும். சில சமயம் பக்கத்து வயலில் வளர்க்கப்படும் கோழிகளை தின்று தன் வீட்டிற்கு சண்டையும் வாங்கி தரும். 

ஆனாலும் கிராமங்களில் நாய்கள், நகரங்கள் அளவிற்கு மனிதர்களுடன் சண்டையிடுவதில்லை. ஏனென்றால் வீட்டிற்கு வீடு காண்பிக்கும் அன்பும் பராமரிப்பும் தான் காரணம்.

ஆனால் நகரத்தில் நாய்கள் சந்திக்கும் சவால்கள் மிக அதிகம். ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு நாய் கூட்டம். புதிதாக ஒரு குட்டி நாய் வந்தாலும் பல நாய்களிடம் கடி வாங்கி ஒரு பதட்டமான சூழலில் எதை பார்த்தாலும் பயப்படும் மனநிலையில் தான் இருக்கும். இதில் மனிதர்கள் யார் எந்த பொருள் கொண்டு வந்தாலும் தன்னை தாக்க வரும் ஆயுதமாகவே பார்த்து பயப்படும். தற்காப்புக்காக தாக்கவும் தயாராகும்.

காலம் காலமாக தெரு நாய்கள் மக்களுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாய்க்கடி அதிகமாகி உள்ளது.

கரோனா லாக்டவுனிற்கு பின் :

நமது நகர வாழ்க்கையையே கரோனா வருவதற்கு முன் , பின் என்று இரண்டாக பிரித்து விடலாம். 

ஊரடங்கு காலத்தில் Work from home (WFH) அதிகமானதால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கே உணவை தருவிக்கும் ஆப்புகளும் { app } அதிகரித்தன. இதனால் உணவு வீணாவது அதிகரித்தது. அதுவும் பிரியாணி ஒரு நொடிக்கு பல ஆயிரம் பேர் ஆர்டர்கள் வருவதாக நிறுவனங்களின் விற்பனை பதிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஒவ்வொரு தெருவிலும் உணவு குப்பை அதிகரித்தது. இதனால் உணவு எந்த இடத்தில் வீணானாலும் அதனை மீண்டும் பூமிக்குள் கொண்டு வர இயற்கை ஏற்பாடு செய்யும் . அந்த வகையில் நாய்களின் எண்ணிக்கை அதிகமானது.

ஒரு பெண் தனியாக போனால் கூட நாலு ஆண்கள் சேர்ந்து இருந்தால் தான் அந்த பெண்ணை பார்த்து விசிலடிக்கவோ கூச்சலிடவோ தைரியம் பிறக்கிறது. அது போல் தெருவில் ஒன்று இரண்டு நாய்கள் இருந்த இடத்தில் 7 / 8 நாய்க் கூட்டம் வந்தவுடன் இருப்பதில் பலகீனமானவர்களை தாக்கும் தன் இன உணர்வு மேலோங்கி சிறுவர்கள், வயோதிகர்கள், தனியாக வருபவர்களை தாக்கும் தன்மை கூடியுள்ளது.

யாரை அதிகம் தாக்குகிறது ?
அதே சமயம் நாய்களும் தங்களை வெறுப்பவர்களை, துரத்துபவர்களை, கல்லடிப்பவர்களை தான் சந்தர்ப்பம் வாய்க்கும் போது தாக்குகின்றன.

அதுவும் நாய்கள் தூங்கும் நேரத்தில் அதி வேகமாக சத்தம் எழுப்பி வண்டி ஓட்டுபவர்களை , நாய் குட்டிகளை வண்டியில் இடித்து விட்டு செல்பவர்களை அதிகமாக தாக்குகிறது, விரட்டுகிறது. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது.

கழுகுகள் எண்ணிக்கை மாடுகளுக்கு போட்ட ஊசிகளால் 100% லிருந்து 4% ஆனது. மாட்டிறைச்சிகளை 45 நிமிடத்தில் செரிமானபடுத்தி கொள்ளும் திறனுடைய கழுகுகள் இல்லாததால், அதனை முழுமையாக ஜீரணிக்க திறனில்லாத நாய்களுக்கும் எலிகளுக்கும் கூடுதல் பொறுப்பு வந்ததால் சரியாக ஜீரணம் ஆகாத நாய்களுக்கு ஒருவித இயலாமையினால் கோவம் வந்து அது வெறியாக மாறி குழந்தைகளை கூட கடித்து குதறும் கோபம் அதிகமாகியுள்ளது. இது இயற்கை மனிதர்கள் மீது கொண்டுள்ள கோபமாகவே தோன்றுகிறது.

இதற்கு மனிதர்களாகிய நமது குப்பை போடும் அலட்சிய மனோபாவமே மூலக் காரணம். 
உணவை அளவோடு உண்ண வேண்டும், அதனை வீணாக்க கூடாது என்பதே அடிப்படை.

நாய்கள் கடிக்கிறது என்று அவைகளை கொன்றாலும், கருத்தடை செய்து மெதுவாக கொன்றாலும் வேறொரு உயிரினத்தை அந்த இடத்திற்கு இயற்கை அனுப்பி வைக்கும். இயற்கை தன்னை தானே புனரமைத்து கொள்ளும் ஆற்றல் பெற்றது.

 சூரத் நகரில் நாயை விரட்டியவுடன் எலிகள் எண்ணிக்கை பெருகி பிளேக் நோய் முற்றியது. 

இலண்டனில் நாய்களை விரட்டியவுடன் குப்பை தொட்டியை தேடி நரிகளும் ஓநாய்களும் வருகின்றனவாம்.

மனிதர்களாகிய நாம் ரிமோட் கண்ட்ரோலுக்கு பழகி பழகி ஒரு பட்டனில் நமக்கு வேண்டாம் என்று நினைப்பதை அழிக்க நினைக்கிறோம். ஆண் மாடு தேவையில்லை, பெண் நாய் தேவையில்லை, ஆண் பப்பாளி மரம் தேவையில்லை என்று மற்ற உயிரினங்கள் அனைத்துமே மனிதர்களுக்காக படைக்கப்பட்டது என்ற மன நோய் மனிதருக்கு முற்றிவிட்டது. இதனாலேயே ஊரெங்கும் ஒரு கும்பல் செயற்கை கருத்தரிப்பு மையங்களை உருவாக்கி வருகிறது, ஒரு கும்பல் பெற்ற குழந்தைகளை விற்றுக் கொண்டிருக்கிறது. 

காடுகளை ஆக்கிரமித்து மனித குடியிருப்பை அதிகபடுத்திய பின் யானை ஊருக்குள் வந்துவிட்டது என்று செய்தி போடுவது, அதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது என்று மனிதர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. சமீப காலத்தில் புனேவில் , வால்பாறையில் இரண்டு காணொளிகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காடுகள் அருகில் வீடு கட்டிக் கொண்டு வாழ்பவர்கள் வளர்க்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாட தொடங்கியுள்ளன. இது இயற்கையின் வெளிப்பாடு. ஒரு இனம் அதிகம் ஆனால் அதனை அழிக்க வேறொரு இனத்தை கொண்டு வந்து நிறுத்திவிடும். 

நாய்கடி தான் இந்தியாவின் தலையாய பிரச்சனையா ?
இந்தியா முழுக்க ரேபிஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6000 விட குறைவு. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் 1,60,000 பேர்கள்.
ஆனால் அது குறித்து எத்தனை மனுக்கள் அளித்தாலும், அது குறித்து அரசுகளோ , நீதித்துறையோ கவலைப்படுவதில்லை. ஆள் ஆளுக்கு தடுப்பு ஊசி போட்டோமே, இந்தியாவில் அனைவருக்கும் சாலையில் வண்டிகள் எப்படி ஓட்டுவது என்று பயிற்சி அளிக்கப்பட்டதா ? 

உலகத்திலேயே சாலை விபத்துகளில் முதல் இடம். இதற்காக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, வெளிநாட்டுகளில் எந்த சாலை பாதுகாப்பு கருத்தரங்கிலும் தலைக்காட்ட முடியவில்லை என்று பாராளுமன்றத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். 

நீதிபதி வீட்டு பிள்ளையை ஏதோ ஒரு நாய் கடித்துவிட்டால் அதற்காக ஊருக்குள் இருக்கும் அனைத்து நாய்களுக்கும் கருத்தடை, சிறை தண்டனை என்று நீதியரசர்கள் அவர்களாகவே கேஸை எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள். இதே போல் தினம் தினம் நடக்கும் கற்பழிப்புகளுக்காக அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆப்பரேஷன் செய்து தனிமை சிறையில் அடைத்தால் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா ?? 

சராசரி இந்திய பாதசாரி சாலையில் வண்டிகளில் அடிபட்டு இறந்து போய், உடல் ஊனமாகி தவித்து வருகிறார்கள். ஆனால் இது குறித்து உச்ச நீதி மன்றமோ மிச்ச நீதிமன்றங்களோ எந்த வழக்கையும் தானாக எடுத்து விசாரிக்கவே இல்லை. ஏனென்றால் நீதிபதியின் வீட்டு பிள்ளைகளோ பெரிய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் வீட்டு பிள்ளைகளோ சாலையில் நடப்பதே இல்லை. அடிப்படுவதும் இல்லை. "ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்ற பழமொழியின் படி யாரும் சொந்தம் கொண்டாடாத தெரு நாய்களை கூண்டோடு பரலோகம் அனுப்பலாம் என்று ஒரு கும்பல் இப்பவே கொல்லலாம் என்றும், இன்னொரு கும்பல் கருத்தடை செஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்போம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள். 

காட்டு விலங்குகளின் எண்ணிக்கை வெறும் 4% மட்டுமே. மீதி இருக்கும் 96% மனிதனின் உணவு தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கொடூரமான உயிரினமான மனித இனத்தை கட்டுக்குள் வைக்கவே நாய்களை நமக்கு உறைக்கும் படி தெரிவிக்க குரைக்க அனுப்பியுள்ளது இயற்கை. காடுகளின் பரப்பளவு மிகவும் குறைந்து உள்ளது. இதனை குறைந்தப்ட்சம் 33% நிலப்பரப்பாக மாற்றினால் நாம் பருவ நிலை மாற்றத்தையும் மேக வெடிப்பு, திடீர் வெள்ளம் ஆகியவற்றை தவிர்க்கலாம். விலங்குகளுக்கும் நல்ல பாதுகாப்பான வாழ்விடங்கள் கிடைக்கும்.

மனிதர்களின் கொட்டத்தை அடக்க நமக்குள்ளேயே டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் மற்ற பல உலக அரசியல் தலைவர்கள் மூலம் போர்களை நடத்தி மக்கள் தொகையை தீவிரமாக நடவடிக்கை எடுத்து குறைத்து வருகிறது இயற்கை..

அதனால் நமது வெறி எல்லாம் தெரு நாய்கள் மீதும் அவற்றிற்கு உணவு அளிப்போர் மீதோ காட்ட வேண்டாம் என்பது தான் சிறந்த நிலைப்பாடு. உணவுகளை வீணடிப்பதை குறைப்போம்.

ஐந்தில் விளையாதது : 
அனைத்து குழந்தைகளுக்கும் ஜப்பான் நாட்டில் சொல்லி தருவது போல்:
1. விலங்குகளுடன் எப்படி பழகுவது,
2. சாலையில் எப்படி நடப்பது, 
3.எப்படி வண்டி ஓட்டுவது, 
4.எங்கு குப்பையை எப்படி பிரித்து போடுவது என்ற பயிற்சிகளை சிறு வயதிலேயே பயிற்சி கொடுக்க ஆரம்பித்தாலே இந்தியா ஒரு பொறுப்புள்ள குடியரசாக மாறும். மற்ற உயிரினங்களை கொல்ல துணிந்தால் வெறுப்புள்ள குடியரசாக மாறிவிடுவோம்.

செப் 11- விலங்கிலிருந்து விலங்குகளுக்கு விடுதலை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை யானை மிதித்து கொல்லவில்லை. யானை மஸ்தில் இருந்த போது பாரதி தேங்காய் கொடுக்க சென்ற போது அந்த வெறி நிலையிலும் அவரின் அபரிமிதமான அன்பை உணர்ந்து தள்ளி மட்டுமே விட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்த ஒரு மாதத்திற்கு மேல் தான் மகாகவி தன் உடலை விட்டு நீங்கியுள்ளார். அதனால் அவர் விடுதலை அடைந்த நாளை நாம் அனைவரும் விலங்குளுக்கு விலங்கிலிருந்து விடுதலை அளிக்கும் தினமாக கொண்டாடி கோழிகள், ஆடுகள், மாடுகள், நாய்கள், பூனைகள், யானைகள் மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் மனிதர்களின் விலங்குகளிலிருந்து விடுதலை வழங்கி மனித தன்மையை நாம் அனைவரின் உள்ளிருந்து வெளியே வரச் செய்வோம்.

அன்புடனும் அக்கறையுடனும்

சகிருட்டிஸ்
செப்டம்பர் 2025


 

Friday, September 5, 2025

Teachers Day Gayatri Mantra ஆசிரியர் தின காயத்ரி மந்திரம்


 On 5th September every year, India celebrates it as TEACHERS DAY, after India's 1st Vice President & Philosopher Dr Sarvepalli Radha Krishnan. 

Proponent of Indian Philosophy, Dr Radha Krishnan by his name itself, RADHA & KRISHNA, gives the essence of learning from the environment.

Who is a great Teacher ? How to become a great teacher ?

*****AUM RADHA KRISHNAYA VIDMAHE !!

GNANA VIDYAYA DHIMAHI !!

TANNO ADHYAPAKA PRACHODAYAT  !!

Chant this Radha Krishna Gayatri Mantra 1,00,008 times to receive a Best Teacher Award.

if you chant this 1008 times  - your memory may increase & the students may good ranks in the school or college. *****

Teachers are essentially igniters of the flame, ready to be lit. Kindlers of passion. Enablers of the conducive environment.

Teaching is not unidirectional from the Teacher to the student or from the black board to the benches. It is a bi-directional communication & continuous evolvement of both the Pupil & Teacher. A great teacher is actually a continuous learner & enabler for creating an environment for a pupil to evolve into a beautiful responsible being on Earth.

Parents are the 1st & foremost teachers in every beings' lives.

All the challenges the present society is facing is due to absolving everyone's responsibility & Thrusting the total responsibility on the School Teacher. In this highly challenging environment of competitive survival, it is the school teacher who are carrying the burden of expectations of the Parents & society. 

In the practical sense, A child's development is equally influenced by the Parents, teachers & the society. It is the collective responsibility. Probably that is the reason Dr Radha Krishnan, didn't limit himself to the level of the teacher & He expanded his horizon to become a politician, then an administrator to have larger influence on the society. The People's president Dr APJ Abdul Kalam too emphasized on becoming a great teacher to become a role model for students to get inspired , aspire & become a evolved citizen.

So This day is not a just a token day for appreciation of the Teachers' role. It is a process for continuous evolution of a responsible & inclusive society.

{***** - This Radha Krishna mantra is just created by SAKRITEASE in the usual format of many Gayatri mantras, only to prove a point, NO ONE BECOMES A GREAT TEACHER BY CHANTING any MANTRA.

It is continuous efforts of an individual to express their love for the evolvement of the society to ensure a Peaceful Co-existence of all beings not just Human Beings. Teacher lives by example of their actions than words. In fact a good student learns from everyone he / she meets. So There is a TEACHER & STUDENT DIMENSION is there in everyone of us. 

Happy Learning & Evolving.

Sakritease

சகிருட்டிஸ்

5 SEP 2025

Thursday, August 28, 2025

TRUMP TARIFF WAR CRYPTO NOBEL

 USA President have been claiming from May 2025 that he threatened India with Tariff warning  to stop war on Pakistan and claimed you were successful in stopping the war and establishing peace between neighbors. 


But now you have imposed punitive Tariff of 50% on Indian imports in to USA, which directly means your mediation by threatening India didnt work. So You are frustrated with India as it is not obeying you and going against your wishes for claiming Nobel peace prize for brokering peace. 


Your friend , Pakistan Field Marshal has to submit proof for nominating you for Nobel peace prize. But you are providing evidence contrary to that. You may be given CRPYTO Nobel prize for initiating a war on India economically & also BEST ENTERTAINER of the year award, buddy. 

x POST

@realDonaldTrump If you had stopped India Pak war threatening Tariff on India, then why more Tariff on India ? is it an admission that you failed stopping the war ? Your action & words don't match. Try getting a Crypto Nobel peace prize, if you could achieve inner peace at least.

Thursday, August 14, 2025

kannadasan's curse கண்ணதாசனின் சாபம்

 "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி_இப்போ காணுது பூமி..
இது மட்டும்தானா_இன்னும் இருக்குது சாமி.."

ன்னடா கவியரசர் கண்ணதாசன் எப்பேர்பட்ட அறிவாளி அவர் போய் இந்த மாதிரி இயற்கையில நடக்காததெல்லாம் பாட்டா எழுதிட்டாரென்னு ஒரு நிமிஷம் யோசிக்க வைக்கலாம். 

னா இன்னைக்கு அவர் பாட்ட எழுதி 50 வருஷம் கழிச்சு பார்த்தா இயற்கைக்கு முரணா நாம விஞ்ஞான வளர்ச்சின்ற பேர்ல நாம செய்யற கோமாளித் தனத்தை அப்பவே எழுதிட்டாருன்னு தான் தோணுது .

தாவரங்களை மட்டுமே சாப்பிடும் உயிரினமான யானை இப்போது கேரளாவின் காட்டை ஒட்டி கொட்டபடுகிற குப்பைகளில் இருந்து சிக்கன் கழிவுகளை தின்னும் அளவிற்கு நாம வனத்தை அழிச்சுதால நிலைமை ஆகிவிட்டது. 

கோழிகள் கூண்டில் வளர்ப்பது அதிகமானதால் கோழிகளுக்கு தன்னுடைய முட்டைகளை அடை காப்பது, குஞ்சு பொறிப்பது என்பதே தெரியாமல் போக செய்து விட்டோம். சிக்கன் பிரியாணியா இருந்தா தான் வாழ்வேன்னு அடம் பிடிக்கிற லெவல்ல மக்கள் கொலை வெறியோட சுத்திக்கிட்டு இருக்காங்க.

லைநகர் தில்லியில இனி தெரு நாய்களே இருக்கக் கூடாதுன்னு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 11, 2025 உத்தரவு போட்டு இருக்காங்க. இத இந்தியாவில் மற்ற நகரங்களிலும் நடைமுறை படுத்தவும் சொல்ல போறாங்க. மனிதர்களோட தொன்று தொட்டு பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக நாய்களும் நம்மோடு வாழ்ந்துட்டு தானே இருக்கு. 

ப்ப இந்த பூமி மனிதனுக்காக மட்டும் பயன்படுத்த படைக்கப்பட்டிருக்கா ? மற்ற உயிரினங்கள் இங்க வாழ அனுமதி இல்லையா?  

நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் பண்ணிவிட்டு அவைகளின் எண்ணிக்கை குறைக்க செய்யும் போதே மனிதர்களுக்கு இயற்கையா குழந்தைகள் பிறப்பது குறைந்து வருகிறது. திரும்பின பக்கமெல்லாம் "கருத்தரிப்பு மையங்கள்" தான். இயற்கையை மனிதன் கையில் எடுக்க ஆரம்பிசப்பறம் இயறகையிலே எங்க கையை வைத்தாலும் அதன் பின் விளைவுகள் வேறேங்கோ வெடிக்கிறது. 

 ரி அப்படியாவது மனிதர்கள் ஒற்றுமையா வாழறாங்களா பார்த்தா எங்க பார்த்தாலும் போர்களும் சண்டையும் தான். 

இப்படி பூமிய ஒரு குப்பை மேடாக்கி வாழப் போறோம்னு தன் அறிவுக்கண்ணால் பார்த்து தான் கவிஞர் கண்ணதாசன் "இது மட்டும்தானா_இன்னும் இருக்குது சாமி.."
 அன்றே சாபமாக இந்த பாடலை எழுதி விட்டு சென்றாரா ? 

அதி வேக நகரமயமாக்கல் தான் உண்மையான வளர்ச்சி என்று தவறான சித்தாந்தத்தால் இனி கிராமங்கள், காடுகள் இருக்கவே இருக்காது என்ற சூழலை நோக்கி நாம் தள்ளிக் கொண்டு செல்கிறோம். காட்டுக்குள்ள நெடுஞ்சாலையையும் ரயில் பாதையையும் போட்டுவிட்டு - யானை ஊருக்குள் வந்துவிட்டது தவறான செய்தி போடுகிறோம். யானையின் காட்டை அழித்தால் தெரு நாய்கள் நம்மை வீட்டை விட்டே வராமல் செய்யும். 

"ஜோஹொ" நிறுவன தலைவர் திரு.ஸ்ரீதர் வேம்பு வாழ்ந்துகாட்டி வழிக்காட்டுவது போல் கிராமங்களில் இருந்து கொண்டு வேலை செய்யும் சூழலை, வாழ்வாதராத்தை உருவாக்குவது இன்று அவசர, அவசிய தேவை. நகரங்கள் உலகத்தை நரகங்கள் ஆக்குகிறது. 

யற்கை இதுக்கு மேலயும் பொறுக்கும்னு எதிர்பார்க்காதீங்க. அங்கங்க பூகம்பம், சுனாமி, நிலச் சரிவு நடந்துகிட்டே இருக்கு. இதுவே இயற்கையின் பாதைக்கு திரும்ப வேண்டிய தருணம்.

சகிருட்டிஸ்
sakritease

Tuesday, June 17, 2025

War on White Skin Addiction - Bavma

On 14th June 2025, South Africa Men's Cricket Team defeated Australian Team in World Test Championship final played at Lord's.

South Africa in the last three decades used to be very consistent in reaching finals of the tournament but most of the time they Falter at the final line and earned a tag as "Chokers" in as recent as Dec 2024 in T20 World Cup final.

But this time, for the first time, SA is led by the their first Black rather dark skinned Captain
TEMPA BAVUMA, in a World Test Championship.

South Africa had the long history of White Skin Addiction & Fair skinned Englishmen ill treated the Black Africans in their own homes & treated them as secondary citizen. After centuries of struggle by number of freedom fighters including Nelson Mandela, SA got liberated from British just as many British colonies like India. Even after independence, SA cricket team was dominated predominantly by White men & black men were also included mainly by reservation quota. But Black cricketers like Makhaya Nitini, now Kagiso Rabada played on merits & in the final too Rabada & Lungi Ngidi proved their skills in tearing the Australian batting lineup. 
Tempa Bavuma touching the pinnacle in his very first attempt by winning 8 Test Matches out of the nine He captained is praiseworthy.


Even in the so called, well developed nations, like USA or in Europe, developing Countries like India too is yet to fully recover from the disease of WHITE SKIN ADDICTION. In USA, Whites  predominantly vote for one party & Blacks still vote for the opposition party. Biggest social injustice all around the world happening are, there is discrimination on race, skin complexion, Gender, monetary biases, social statuses, Linguistic hierarchies all across the world. 

In this context, Tempa Bavuma's victory is even more significant against all odds. It is like Lord Muruga's victory over discriminatory
demons. In that unique victory too, The Lord forgives after the demons' realizes their mistake & makes them part of his victory transformation. Interestingly, Lord Muruga, is also referred as Sarva Bavuma**, all conqueror & also referring to his planet, Mars - which is referred as the Mars day in the week, Tuesday as Bavuma Vasara.


In Cricket too, Tempa Bavuma & team forgave all the "Choker" sledges by the Australians & many other insults from other teams enroute to the final, still could hold the mace. Hope the world accepts everyone as they are. Everyone is attempting the equilibrium state, but which is quite difficult as the Lord has made everyone Unique. That has been proved in Lord's too. 


Sakritease 
June 2025


 P.s. 1. Universe coincidentally pushed the Author write this article on a SASHTI - the sixth day after full moon or new moon & on a Tuesday. Both are considered the days of Lord Muruga. 

2. Sarva Bavuma** is the term used by the famous Tamil Film Music Lyricist & Carnatic Music Composer Shri Papanasam Sivan in his song " Sri Valli Deva senapathe". Full lyrics is available in this link https://www.karnatik.com/c6530.shtml

Friday, June 6, 2025

Lingo war of Tamil & Kannada 2025

 



Recently during the launch of His movie " Thug Life" , Actor & politician Kamal Hassan stirred a controversy by claiming Kannada is the Child of Tamil. Kannada natives took this as an insult to their mother tongue. 


Thugs of TN & Karnataka fighting a Lingo War on Tamil & Kannada connection. Ironically Dravidian Tamil's consider Kannada native EV Rama samy naicker as " Thanthai" meaning Father. Then the Draividian model politicians may even claim, Periyar's mother tongue is Tamil's mother tongue too. 

When RCB won 1st IPL title - slogan " Ee saala Cup Naamdu " become famous, where the word "Naamdu" resonates with Tamil's "Namade" meaning "ours". Modi always tells international forums " Tamil as the world's oldest Language "

Kannadigas don't fight over lingo because you are also "Naamdu" . Listen to MGR's unifying song " Naalai Namade Naalum Namade" 

Sakritease in one of our blogs https://sakri-tease.blogspot.com/2025/03/sanskrits-mother-tongue-is-tamizh.html have explained how Sanskrit evolved from Tamizh. Since Tamil & Kannada are spoken in the adjacent landscape there's lots of give & take. But since Tamil is already established as the oldest language of India, it is natural, most of the neighbouring languages have evolved out of Tamizh over due course of time.

Even within Tamilnadu, Tamizh has different lingos like Kongu lingo ( Around Coimbatore Districts -western belt ), Madurai Lingo , Tirunelveli, Thoothukudi lingos etc... 

Fighting for supremacy is utter waste of time as present day Tamizh is nowhere near the original language spoken several thousand years ago. Even the letters have changed. 

Only consistent thing is change. Accepting & adopting changes is part of evolution.



No language is inferior to any other Language. 
That is the Basic wisdom, we should have realized by now.

P.s. After writing this post, we received the message about the stampede deaths outside Bengaluru Chinnasamy Cricket stadium, while RCB celebrated its maiden IPL victory in Bengaluru.

Fanaticism Kills is the message. Dont elevate Cricketers or Cinema stars more than their ordinary status. Every Life is valuable.

Sakritease
6th June 2025

Thursday, May 29, 2025

இந்தியாவின் மிகப் பெரிய எதிரி

 இந்தியாவின் மிகப் பெரிய எதிரி"

ஏப்ரல் 22, 2025 அன்று - பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள பஹல்காம் கிராமத்தில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர். இது இந்தியாவின் தீராத எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியது. கடந்த 75 ஆண்டுகளாக கோழைத்தனமான ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க மட்டுமே அவர்கள் செலவு செய்து வருகின்றனர். இது ஒரு நிரந்தர தலைவலி என்றாலும், முப்படைகள், ரா, என்எஸ்ஏ, என்ஐஏ, மாநில காவல்துறை ஆகியவை பொதுமக்கள் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.

சீனா, திபெத், வங்கதேச எல்லைகளைப் போலவே - எல்லைப் பதட்டங்கள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, நமது எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் ஆண்டு முழுவதும் விழிப்புடன் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த நேரடி எதிரிகளை காட்டிலும் ஒரு மிகப் பெரிய எதிரி இந்தியாவை விடாது அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவின் மிகவும் பயங்கரமான எதிரி எது?

ஏப்ரல் 2025 இறுதியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு கணக்கெடுப்பில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பைச் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு வந்தது.

கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வரும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தான் அது. மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற விரும்பும் இந்தியா, பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு அடுக்குகளிலும் ஊடுருவி வரும் இடஒதுக்கீடு அளவுகோல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், கிட்டத்தட்ட 90% இந்தியர்கள் 75 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் மூதாதையர் செய்ததைப் போல எந்த பரம்பரை நடைமுறைகளையும் பின்பற்றுவதில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஒரு காலத்தில் ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமை நடைமுறையில் இருந்தது இப்போது இந்தியாவில் நடைமுறையில் இல்லை.

இந்து, முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர் என ஒவ்வொரு சமூகமும் ஒருவரின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மதிப்பது என்பதே நடைமுறையில் உள்ளது. மிகவும் பணக்காரர், பணக்காரர், நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள் என்பதே தற்போதைய சாதி அடையாளங்கள்.

அதிக வருமானம் ஈட்டும் பையன் அல்லது பெண் குறைந்த வருமானம் ஈட்டும் பெண் அல்லது குறைந்த வருமானம் ஈட்டும் திறன் கொண்ட பையனை வாழ்க்கை துணையாக நாடுவதில்லை.

விரைவான நகரமயமாக்கல் சாதி பாகுபாட்டைக் குறைத்தது:

மேலும், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் யாரும் பாகுபாடு, ஒடுக்குமுறை, தீண்டாமை ஆகியவற்றை அனுபவித்ததில்லை, குறிப்பாக நகர்ப்புற மையங்களில், அண்டை வீட்டாரின் சாதியை அறிய வேண்டிய அவசியமின்றி மக்கள் சமூகமயமாக்கப்படுகிறார்கள். இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகிறது, மேலும் ஒவ்வொரு 50 கி.மீ.க்கும் ஒரு நகரம் அல்லது பெரிய நகரம் உருவாகியுள்ளது.

சாதிச் சான்றிதழ் இல்லை - சாதியை அறிய வாய்ப்பு இல்லை:

இந்திய அரசு, குறிப்பாக மாநில அரசுகள், சாதி அடிப்படையிலான பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை நிறுத்தினால், இன்றைய இளைஞர்களில் யாரும் பிறப்பால் தங்கள் சாதி என்ன என்பதை ஒருபோதும் அறிய மாட்டார்கள்.

ஆனால் அரசியல் எஜமானர்கள் சாதிப் பிரச்சினையை ஒருபோதும் அழிய விடமாட்டார்கள். அரசியல்வாதிகள் அதை தொடர்ந்து வளர்க்க விரும்புகிறார்கள்.

உழைப்பின் கண்ணியம்:
முந்தைய தலைமுறைகளில், ஒருவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் மக்கள் மற்றவர்களை இழிவாகப் பார்த்தார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலை மாறி வருகிறது, முடி திருத்துபவரை இப்பொது நாவிதர்  என்று அழைப்பதில்லை, மேலும் தங்களை "ஹேர் ஸ்டைலிஸ்ட்", "பியூட்டிஷியன்கள்" என்று அழைத்துக் கொள்ளும் அளவுக்கு ஸ்டைலான தொழில்களாக மாறிவிட்டன. தொழிலை தொழிலாக அழகுணர்ச்சியுடன் பார்க்க தொடங்கிவிட்டார்கள்

சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவோம் என்ற பயம் இல்லாமல் தொழில்முறை இறுதிச் சடங்குகளைச் செய்பவர்கள் உள்ளனர். மக்கள் தங்கள் தொழில்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பலரும் தொழில்முறை வல்லுநர்களாக மாறிவிட்டனர். பல வகையான ஊடகங்கள் மூலம் சர்வதேச வெளிப்பாடுகள் காரணமாக இது சாத்தியமாகி உள்ளது.

2K குழந்தைகளுக்கு, WWF & Mr. Undertaker மிகவும் பிரபலமானவர். Undertaker என்பது ஒரு தொழில் பெயர் என்றாலும், இந்த கரடுமுரடான மற்றும் கடினமான மனிதர் பொழுதுபோக்கை தனது தொழிலாக கொண்டுள்ளார். இந்திய சாதி அமைப்பும் இப்படித்தான். இவர்களில் யாரும் தங்கள் மூதாதையர் மேற்கொண்ட சாதி அடிப்படையிலான கடமையைச் செய்வதில்லை.
கொள்ளுப் பேரன் தனது கொள்ளுப் தாத்தா எதிர்கொண்ட ஒடுக்குமுறைக்கு இடஒதுக்கீட்டை அனுபவிப்பது எவ்வளவு நியாயம்?

இந்தியர்கள் எந்த இடஒதுக்கீடும் இல்லாமல் வெளிநாடுகளில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்

இப்போது இந்தியர்கள் பல வெளிநாடுகளில் நன்றாக வேலை செய்கிறார்கள், மேலும் வேறு எந்த நாட்டிலும் எந்த இட ஒதுக்கீடும் இல்லாமல் முக்கியமாக அவர்களின் திறமைகளின் அடிப்படையில் தங்கள் தொழில்களில் சிறந்து விளங்குகிறார்கள்.

அரசியல்வாதிகளின் பாசாங்குத்தனம்

பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயம்- அனைத்து சாதியை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளும் எந்த நோய்க்கும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே  அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்க, அங்கு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை.  ஆனால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசாங்கத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதால், அரசியல்வாதிகள் ஒருபோதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வர மாட்டார்கள்.

இதன் பொருள் : இடஒதுக்கீடு சேவைகளின் தரத்தைக் குறைக்கிறது?

தற்போது அரசியல்வாதிகள் தனியார் நிறுவனங்களில் வேலைகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர்.

பொதுத்துறையில் திறமையின்மை:

தனியார் துறையைப் போலல்லாமல், தொழிலில் வளர்ச்சிக்கு செயல்திறன் முக்கிய அளவுகோலாக இருக்கும் இடத்தில், பொதுத்துறையில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டுமே பதவி உஅயர்வில் யார் உயர வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. மிகவும் திறமையான மற்றும் அறிவுள்ளவர்கள் கூட, பிறந்த சாதியை மட்டுமே தகுதியாகக் கொண்டவர்கள் இடம் கீழ்படிய வேண்டும். 

எனவே, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில், தர்க்கம் என்னவென்றால், 20% ஊழியர்கள் அனைத்துப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அனைத்து கடின உழைப்புகளையும் செய்கிறார்கள், மீதமுள்ள 80% பேர் எந்த அர்த்தமுள்ள பங்களிப்பும் இல்லாமல் இருக்க முடிகிறது. 20% திறமையானவர்கள் 80% பேரின் திறமையின்மையால் அவர்கள் பணிச்சுமையை சேர்த்து சுமக்க வேண்டி வருகிறது. அதனால் நல்ல செயல் திறன் உள்ளவர்களை தனியார் துறையும் வெளிநாட்டு நிறுவனங்களும் ஈர்க்கின்றன. 

எனவே பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தனியார் துறையுடன் ஒப்பிடும்போது ஒரே வேலைக்கு அதிக பணத்தை செலவிடுகின்றன.
உதாரணமாக தமிழ் நாட்டில் ஓடும் அனைத்து தனியார் பேருந்துகளும் அதே கட்டணம் வசூலித்தாலும் அரசு பேருந்துகளை காட்டிலும் நல்ல தரமாக பேருந்துகளை பராமரிக்கிறார்கள், இலாபம் ஈட்டுகிறார்கள், புது வண்டிகளை வாங்கி ஓட்டுகிறார்கள். ஆனால் அரசுப் போக்குவரத்து கழங்களின் பேருந்துகள் எப்போதும் பாடாவதியாகவே உள்ளன. அதிலும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள நிலுவை,ஓய்வு ஊதியங்கள் கூட வழங்காமல் நன்றாக வேலை செய்யும் ஊழியர்களை மட்டுமே கசக்கி பிழிகிறார்கள். 

துரததிர்ஷ்டவசமாக, அனைத்து அரசு நிறுவனங்களும் 20% செயல்திறனில் மட்டுமே இயங்குகின்றன. எனவே, நமக்கு மிகவும் திறமையான பிரதமர் இருந்தாலும், அவரின் செயல்திறன் சாதாரண மனிதனுக்கு எட்டுவதில்லை, சாதிவாரி இட ஒதுக்கீடு முறை அனைத்து செயல் திறனையும் முடக்கி
சாதாரண குடிமக்களுக்கு அரசின் மூலமாக கிடைக்க கூடிய நன்மைகள் அனைத்தும் நீர்த்து போய் பல சமயம் கிடைப்பதே இல்லை.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் அதி சாமர்த்தியசாலி அடாவடி அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன, அவர்கள் அரசியல் அமைப்பின் பலவீனமான இணைப்பை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் மதம், சாதி, பிராந்தியங்கள் போன்றவற்றின் பெயரால் நீண்ட கால ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லாமல். பொதுமக்களைப் பிரித்து ஆட்சியவே செய்ய விரும்புகிறார்கள்...

எனவே, குறுகிய பார்வை கொண்ட அரசியல்வாதிகள், செயல்திறனை தங்களுக்கு வசதியான தரத்திற்கு குறைக்க விரும்புகிறார்கள். நாடு தகுதி, திறமை மற்றும் செயல்திறனில் இயங்கினால், அடி தடிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பொது களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், தங்கள் கட்டளைப்படி நாட்டை நடத்த முடியாது.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முதலில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்தது

அரசியலமைப்பை எழுதியவர்கள் முதலில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை சுதந்திரத்திற்குப் பிறகு முதல் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே வரைந்தனர். ஆனால் தற்போதைய அரசியல்வாதிகள் நாடு நிரந்தரமாக சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் இருக்க வேண்டும் என்றும், திறமையின்மையை தனியார் துறைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீட்டின் தொடர்ச்சி இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வெடிக்கும் வெடிகுண்டு, இதை சீனா, பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் போன்ற நமது பூகோள ரீதியான எதிரிகள் கூட ஒருபோதும் நமக்கு செய்ய முடியாது.

வங்கதேசம் போன்ற குறைந்த வளர்ச்சியடைந்த நாட்டில் கூட, மாணவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடினர்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய பெண்களுக்கான மாதாந்திர ஆதரவு நிதித் திட்டத்தில், பாஜக முதலில் அதை எதிர்த்தது. ஆனால் இப்போது அனைத்து எதிர் கட்சிகளையும் போலவே, பாஜக ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் அதே திட்டத்தை அறிவிக்கிறது.

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையில், அனைத்து கட்சிகளும் நீண்ட காலமாக சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கோரின, பாஜக இந்தத் கோரிக்கையை எதிர்த்தது, ஆனால் இப்போது மையத்தில் உள்ள பாஜக அரசு நாடு முழுவதும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது..

வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக ஒவ்வொரு மக்கள் தொகை சார்ந்த ஆனால் பொருளாதாரத்தை வடிகட்டும் கொள்கைகளையும் நகலெடுக்க போகிறது என்றால், இந்தியா எப்படி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்? 

தற்போது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 5 மடங்கு அதிகமாக உள்ளது & அமெரிக்கா இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 8 மடங்கு அதிகமாக உள்ளது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை ஒருபோதும் வளரவும் சீனாவுடன் போட்டியிடவும் அனுமதிக்காது.

பொருளாதார நிலை அடிப்படையிலான இடஒதுக்கீடு:

ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் & அனைத்து மதங்கள், அனைத்து சாதிகள், அனைத்து இனப் பின்னணியைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுவான அளவில் வருவார்கள். பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு 10% ஒதுக்கீட்டை வழங்குவதன் மூலம் திரு. மோடி ஏற்கனவே இந்த திசையில் ஒரு படி முன்னே சென்றுவிட்டார். இதுவரை பள்ளிக் கூட ஏட்டு கல்வியறிவு குறைவாக உள்ள முஸ்லிம் இளைஞர்கள் கூட, சமூகத்தில் உள்ள கடுமையான தீவிரவாத சக்திகள் தவறாக வழிநடத்த படுவதற்கு பதிலாக, சம வாய்ப்புகள் கிடைக்கும் போது பொருளாதார வாழ்வில் வளர ஆவலுடன் முன்னே வருவார்கள். அப்போது தீவிரவாதத்தை தூண்டும் சக்திகள் வலுவிழக்கும்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் சமீபத்தில் ஒரு தீர்ப்பில் கூறியது, "நாட்டில் இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டிகளைப் போல மாறிவிட்டது, அதில் நுழைந்தவர்கள் மற்றவர்களை உள்ளே வர விட விரும்பவில்லை. இது உள்ளடக்கிய கொள்கை. அரசாங்கங்கள் அதிக வகுப்புகளை அடையாளம் காண கடமைப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய மக்கள் உள்ளனர். அவர்கள் ஏன் (இட ஒதுக்கீட்டின்) பலனைப் பெறக்கூடாது? ஒரு சில குடும்பங்கள் மற்றும் குழுக்கள் மட்டுமே பலனைப் பெறுகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, இந்தியா சாதிகள் (அனைத்து மதங்களிலும்), மதங்கள், இனக்குழுக்கள், இனங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாட்டை நிறுத்து வேண்டும்... மேலும் வறுமையைப் போக்கவும், அனைத்து குடிமக்களுக்கும் சமூக சமத்துவத்தை உறுதி செய்யவும் மட்டுமே ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது.

எனவே, உண்மையான வளர்ச்சியை விரும்பினால், அதற்கான முதல் படி சாதி மற்றும் மதச் சான்றிதழ்களை ஒழிப்பதாகும்.

சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை எதிரி நாடுகளாக இருக்கலாம், ஆனால் உண்மையான எதிரி பிறப்புரிமை மூலம் இட ஒதுக்கீடு என்ற தவறான நடைமுறையில் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளார், இது நாட்டின் லட்சிய வளர்ச்சியைத் தடுக்கிறது.
சீனாவில் இட ஒதுக்கீடு போன்ற எந்த தடையும் இல்லாமல் அந்த நாடு அவர்களின் டிராகன் போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரந்து விரிந்துள்ளது.

பதவி உயர்வுகள், தனியார் துறை போன்றவற்றில் இடஒதுக்கீட்டைச் சேர்க்க பல அரசியல்வாதிகள் பின்னோக்கிச் செல்கிறார்கள்...

ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் பதக்க இடஒதுக்கீடு கூட அவர்கள் கேட்கலாம்.

பல உயர் நீதிமன்றங்களில், இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்ந்து வருகிறது, பெரும்பாலான நீதிபதிகள் இறுதியில், பெயர் பலகைகள், தெரு பெயர்கள், நிறுவனப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று தான் கருத்து தெரிவிக்கிறார்கள், ஆனால் அது பிறப்புச் சான்றிதழ்களில் சாதி, மதம் , இன குறிப்புகள் நீக்கப்பட வேண்டும் என்று கூறுவதில்லை & எந்த சாதிச் சான்றிதழும் வழங்கப்படக்கூடாது என்று கூறுவதில்லை.

சீனா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நிலைகளுடன் இந்தியா பொருந்த விரும்பினால், நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படவும், திறன் நிலைகளை மேம்படுத்தவும் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்ட பின்தங்கியவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படலாம்.

நாட்டின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு முக்கியமான கேள்வி

நடந்துகொண்டிருக்கும் "ஆபரேஷன் சிந்தூர்" போரில், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் தோட்டாக்கள், ஏவுகணைகளை எதிர்கொள்ளும் முன்னணியில் நமது எத்தனை வீரர்கள் உள்ளனர் ?? யாரும் இல்லை என்பதே நிதர்சனம். இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த சாதியினர் இத்தனை சதவிகிதம் இராணுவத்தில் சேர வேண்டும், போர் முனையில் இந்தந்த சாதியினர் இத்தனை சதவிகித குண்டுகளை நெஞ்சில் வாங்க வேண்டும்? இத்தனை எதிரிகளை கொல்ல வேண்டும் என்று எந்த அரசியல்வாதியாவது கூறுவாரா ?

அதே குறிப்பில், ஆயுதப்படை வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடுவதால், அனைத்து சிவில் நடவடிக்கைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படலாம், தொடரலாம். ஏனெனில், அவர்கள் தேசத்திற்காகவும் மற்றவர்களுக்காகவும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.

இந்த ஆயுத படை வீரர்களையும் சாதி ரீதியாக அலச ஆரம்பித்துவிட்டனர். "சிந்தூர்" நடவடிக்கைகளை செய்தியாக பெண் ராணுவ உயர் அதிகாரிகள் இருவர் மிக சிறப்பாக செயலாற்றினர் என்று நாடே அவர்களை பெருமையுடன் பேச, உடனே ஒரு மபி மாநில அமைச்சர் ஒரு அதிகாரியும் புல்வாமா பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளும் "ஓரே மதத்தை" சேர்ந்தவர் என்று பொன் மொழிகிறார். இராணுவ அமைச்சரே பல முறை "பயங்கரவாதிகளுக்கு மதமில்லை" என்று கூறிய பிறகும் இப்படி ஒரு அமைச்சர் பேசுகிறார். ஒரு உபி அரசியல்வாதி " விமான படை பெண் அதிகாரி" ஒரு "ராஜபுத " பெண் இல்லை அவர் வேற ஜாதிக் காரர் என்கிறார். இந்த பிரித்தாளும் அரசியல்வாதிகளும் எல்லா வகையிலும் சமுதாயத்தில் புரை ஓடிய நிலையில் உள்ள சாதி , மத மன நிலையே காரணம்.

இந்திய யானை தனது வாழ்நாள் முழுவதும் ஓட முடியும், ஆனால் அந்த சீன டிராகனைப் போல ஒருபோதும் பறக்க முடியாது. அதுவும் இந்திய யானைக்கு அந்த ஐந்தாவது கால் உள்ளது (படத்தில் காட்டப்பட்டுள்ளபடி), இது சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் உருவகம், வளர்ச்சிப் பாதையில் ஒரு தடையாக உள்ளது.

Sunday, May 11, 2025

India's Biggest Enemy is ..........




  On 22 April 2025 - Pakistan Trained terrorists killed 26 Tourists in Pahalgam Village in Kashmir immediately evoking Public anger against India's perennial enemy Pakistan, who have been spending only to train terrorists to carry out cowardly operations of Infiltration for last 75 years. Though it is a perennial head ache but Three armed forces, RAW, NSA, NIA, State Police Forces ensures Public is largely unaffected.

Same with the China, Tibet , Bangladesh borders- all our border security arrangements are doing vigilant surveillance round the clock throughout the Year to keep the common public remain unaffected due to border tensions. 

What is that most horror inflicting enemy of India ?

On the end of April 2025, there was a announcement about Government planning to include caste based census in census survey of the population.

It is the Caste based reservation that India is bleeding on for the last 75 years. India aspiring to be a 3rd Largest economy is severely handicapped by the reservation criteria infiltrating in every strata from Birth to Death. 

Technically speaking nearly 90% of the Indians does not practice any hereditary practices as did by their ancestor 75 years ago.

What was once an oppression & untouchability practiced a century ago is no longer practiced in India.

The Main discrimination every society be it Hindu, Muslim or Christian is only being practiced based on one's economic status. Ultra Rich, Rich, Middle Class and Poor are the current caste identities. 

High earning boy or a Girl does not seek the alliance of a low earning Girl or a Boy with low earning potential.

Rapid urbanization decreased Caste discrimination :

Moreover none of the present generation of Youth have never experienced discrimination, oppression, untouchability especially in the urban centers where people are socializing without the need to know the caste of the neighbour. India is getting rapidly urbanised and every 50 Kms there is a city or big town has sprung up. 

No Caste Certificate - No chance to know Caste:

If the Govt of India , more specifically the State Governments stops issuing caste based birth certificates none of the current day youth would never know what is their Caste by birth.

But the Political masters never want the caste issue to burn out. Flame Politicians keep, want to flare it up.

Dignity of Labour :

In the previous generations, people looked down upon others based on the profession one was carrying out. But the current scenario is changing, Barbaric languages like using "Barbers" have become obsolete & more stylish to call themselves as " Hair Stylist" , "Beauticians" etc...

There are people doing professional funeral services without the fear of becoming social outcast. People have become more & more professional to accept their professions as they are. More so because of international exposure through many forms of media.

For 2K kids, WWF & Mr. Undertaker is very popular. Though Undertaker is a profession name but this rough & tough man carries entertainment as his profession. This How Indian Caste system is also. None of them carries out any caste based duty carried by their ancestor.

How fair it will be for Great grand son enjoy a reservation for the oppression faced by his Great Grand father ?

Indians doing very well abroad without any reservation

Now Indians are well employed in many foreign countries and are excelling in their professions mainly based on their skills without any reservations in any other country. 

Hypocrisy of Politicians

Public - please note all caste craving politicians gets admitted for any ailment only in Private Hospitals where reservation is not followed up in recruitments of doctors in Private Hospitals. They will never get themselves treated in Government hospitals as Doctors, Nurses and all staffs are recruited by Govt based on Caste based  Reservation.

Which simply implies Reservation reduces the quality of services ?

Now politicians are aiming for reservation in Jobs in private
institutions. 


Inefficiency in Public Sector :

Unlike private sector, where performance is the main criteria for growth in the profession, Public sector only caste based reservation decides who will go up in  the hirerarchy. Even the most efficient & knowledgable have to obey, those whose only merit is the caste he/ she is born in.

So in any Govt offices States & Central, the Logic is 20% staff take all the responsibility & do all the hard works, rest 80% shall be just present without any meaningful contribution.

So most of the Govt owned / run institutions spend more money for the work extracted comparing to the private sector.

Unfortunately, all the govt institutions run only on the government machinery at 20 % efficiency.  So even if we have very efficient Prime Minister, the efficiency is not percolating to the common man, who finds it very difficult to beat the bureaucracy & political opportunism. 

Most of the Political parties are run by street smart politicians, who only exploit the weakest link of the political system.  Politicians wants to divide and rule the Public in the name of religion, caste, regions etc... without a vision for a long term. 

So, the short sighted Politicians, want to pull down the efficiency to their comfortable standard. If the Country runs on merit, skill & efficiency, Those politicians who are in the public domain only based on Muscle Power, cannot be able to run the country according to their diktat.

Caste based Reservation was only for intial 10 years

The Constitutional writers originally drafted the caste based reservation system only for 1st 10 years after Independence. But the current politicians wants the country to be in Caste based reservation permanently and introduce the inefficiency to Private sector too.

Caste based census & continuation of Reservation is the Bomb ticking in every nook & corners of India, which even our physical enemies like China, Pakistan or Bangladesh can never reach.

Even in the lesser developed country like Bangladesh, students fought against Reservation.

In Monthly support money scheme for women started by Aam Aadmi Party in Delhi, BJP 1st opposed it.But now like all the Opposition parties, BJP is announcing the same scheme in every state election.

In caste based census demand, all parties demanded the Caste based census survey for long time and BJP was opposing the need but now BJP Govt in Centre is going to conduct a caste based census through out the country.


If BJP is going copy cat every populist but economy draining policies for vote bank politics, How will India ever become a 3rd largest economy ? At present China's GDP is 5 times more than India's & USA is about 8 times that of India's. Caste based resservation system will never allow to grow & Compete with China. 


Reservation based on economic status :

will be game changer & will include youth from all religion , all castes, all ethnic origins to come on a common scale. Already Mr. Modi went one step in this direction by giving 10% quota for economically weaker sections. Even hitherto lesser literate Muslim young men too, will look forward to grow, instead of being misguided by hard core radical elements in the society. 

Recent observation by SC Judge Justice Surya Kant then said, "Reservation in the country has become like train compartments, people who have got in don't want to let others come in. This is the principle of inclusivity. Governments are duty-bound to identify more classes. There are politically, economically and socially deprived people. Why should they not get the benefit (of reservation)? Only a few families and groups are getting the benefit," he added.

Hence it is high time - India stops discrimination based on Castes ( in all religions ) , Religions , ethnic groups, races etc... and build a society only to alleviate poverty & ensure social equanimity for all citizens.

So the first step towards that is by abolition of Caste & religion certificates - if we wants real development.  

China, Pakistan, Bangladesh may be the physical enemy nations but the real enemy is deeply interwined in the wrong practice of Reservation by Birth right,which is hampering the aspiring growth of the nation.

Many politicians are in retrograde step to even include reservation in Promotions , in private sector etc...

They may even ask for medal reservations in Olympics sports too. 

In many High courts, the issue of reservation keeps coming up & most of the Judges end up saying, remove the caste names on name boards, street names, Institution names, but it should be removed from Birth certificates & NO caste certicate should be issued. 

Underprivileged based on economic status can be given special training to fare well in entrance exams & skill levels to be upgraded if India wants to match the economic levels of China & USA.

To all country men & women :

in the ongoing war "Operation Sindoor", how many of our soldiers are in the front line facing bullets, missiles based on caste & religion ?? None.

 In the same note Reservation can be given & continued for the armed forces service personnel in all civil activities as they are putting their life in danger for Nation's & others sake.


Indian Elephant may be able to run through out its life but may never be able to fly like that Chinese dragon. That too Indian elephant has that fifth leg ( as shown in the Picture ), metaphor for the Caste based reservation, as an impediment in the path of growth.

                                        Sakritease

                                        May 2025