A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Friday, March 7, 2025

கொளத்தூர் கண்ணம்மா Kolathur Kannamma


கொளத்தூர் கண்ணம்மா

அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே
சரணடைந்த நீயே

2018 நாம் கூடி ஊழலை ஒழிப்போம்
என்ற நீதி மய்யம் கண்ட நீயே,
 இன்று நீ குறில் ஆகி 
நிதி மையத்தில் 
உட்காந்து கை கூப்ப வச்சுடுச்சே

மூன்றாம் பிறையில்
"நீல நிற சாயம்பட்ட குள்ள நரி கால் தவறி விழுந்த தடி சின்ன பொம்பள " அன்றே உங்க சொந்த குரலில் பாடினீங்க.
அப்படியே " கலரு மாறிப் போச்சு அது காடு தேடி போச்சு " அப்பவே "பாடி"ய நீங்கள் " யாரென்று தெரிகிறதா " என்று உங்க " விஸ்வரூபம்" காண்பிச்சீங்க. 

ஆனா உங்க அடிப்படை கொள்கை யான " யார் காதிலும் பூ சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன்"  என்ற நீங்கள். 
எப்பவும் நீங்க "நம்மவர்" ன்னு நினைச்சவங்கள          " தெனாலி" ஆக்கி போட்டு நீங்கள் என்றென்றும் " வசூல் ராஜா " என்று நிரூபித்து விட்டீர்கள் 

சகிருட்டிஸ் 
sakritease March 2025


 

1 comment: