அன்புள்ள உலக கிரிக்கெட் கௌன்சில் தலைவருக்கு,
பொருள்: உலக கோப்பை வெல்ல இட ஒதுக்கீடு வேண்டும்
நடந்து முடிந்த கிரிக்கெட் உலக கோப்பை 2023ல் இந்திய அணிக்கும் இந்தியர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை தங்களது கவனத்திற்கு கொண்டு வரவே இந்த கடிதம்
குற்றச்சாட்டு No.1 :
உலக கோப்பையில் இந்தியா விளையாடிய 11 போட்டிகளில் 10ல் வென்றிருந்தது, ஆனால் ஆஸ்திரேலியா 9 போட்டிகளில் மட்டுமே வென்றாலும் அவர்களுக்கு உலக கோப்பையை வழங்கியது மிகப் பெரிய அநீதியாகும். இது வெற்றி சதவிகித அடிப்படையில் நோக்கினால் தவறாகும். இது ஐசிசி கணித திறமையின் குறைபாடாகும். இது வெள்ளை தோல் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஒருதலை பட்சமாக சாதகமாகும். இந்த அபாண்டமான நடவடிக்கையால் ஆஸ்திரேலியா 6 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதனால் இன ரீதியாக பாதிக்கப்பட்ட தென் ஆப்பரிக்கா போன்ற நாடுகள் எந்த காலத்திலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இனி ஒரு விதி செய்வோம், ஆஸ்திரேலியா இனி மேல் பைனலுக்கு வந்தால், அவர்கள் இரண்டாவதாக ஆட வேண்டி வந்தால் முதலில் ஆடிய அணி 50 ஓவர்களில் அடித்த ரன்களை ஆஸ்திரேலியா அணி 30 ஓவர்களில் அடிக்க வேண்டும், அதே போல் ஆஸ்திரேலியா முதலில் ஆடினால் அவர்கள் 50 ஓவர்களில் அடிப்பதை எதிர் அணி 60 ஓவர்களில் அடிக்க அனுமதிக்க வேண்டும். இதுவே இனிமேல் கிரிக்கெட்டில் சமூகநீதி கோட்பாடாக வேண்டும்.குற்றச்சாட்டு No. 2 :
ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்தியாவின் முன்னேறிய இனமான பிராமண குலத்தை சேர்ந்த ரோகித சர்மா விளையாடும் போது மட்டும் 30 யார்ட் வட்டத்தை தாண்டி இரண்டே இரண்டு பீல்டிகரகளை வைத்தார், அவருக்கு அடுத்து வந்த ஷ்ரேயஸ் அய்யர் 9.4 வது ஓவரில் ஆட வந்த போதும் இந்த சலுகையை அளித்தார். ஆனால் அதே கம்மின்ஸ் பிற இனங்களை சேர்ந்த இந்திய வீரர்கள் வந்த போதும் மட்டும் ரன்களே அடிக்க விடாமல் அவர்களை திணறடித்து பீல்டர்களை பரவலாக நிற்க வைத்து ரன் அடிப்பதை முடக்கினார். விராட் கோலியை மட்டும் அவர் ஒரு பிராமண பெண், அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்திருப்பதால், 51 ரன்கள் எடுக்க அனுமதித்தார். முப்பது யார்ட் சர்கிளிக்கு வெளியே 5 பீல்டர்களை வைத்து இரண்டு யாதவர்களுக்கும் ( சூர்ய குமார், குல்தீப்) இரண்டு முகமதுக்களையும் ( ஷமி, சிராஜ்) ஓடுக்கப்பட்டவர்களையும் சிறுபான்மையினரையும் ரன்னே அடிக்க விடாமல் பந்துகளை பாய்ந்து பாய்ந்து தடுத்தார் கம்மின்ஸ். . கம்மின்ஸ் இந்த செயல்களுக்கு உந்து சக்தியாக இருந்தது, தமிழ் நாட்டு அய்யங்கார் பிராமண பெண்ணை மணந்த க்ளென் மாக்ஸ்வெல்லாக இருக்கக் கூடும் என்று நம்ப இடமிருக்கிறது. இந்த மேக்ஸ்வேல் கால்கள் இரண்டும் மரத்து போன நிலையிலும் சிறுபான்மையின ஆப்கான் பவுலர்களை துவம்சம் செய்து இரு நூறுகளை அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ( ஆப்கன் முஸ்லிம்கள் அவர்கள் நாட்டில் பெரும்பான்மையினராக இருந்தாலும் இந்தியாவில் மேட்ச் நடந்ததால் அவர்கள் இங்கு சிறுபான்மையினரே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் )குற்றச்சாட்டு No 3
இந்த ரோகித் ஷர்மா பிறப்பால் பிராமண குலத்தில் பிறந்துள்ளதால், அந்த குயுக்தியுடன் தான், 40 முதல் 50 ஓவர்களில் ஆட வராமல் முதல் 10 ஓவர்களில் ஆடி அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலில் உள்ளார். அதனால் ஐசிசி இனிமேல் ரோகித் போன்ற முற்பட்ட பிரிவினர் விளையாடும் போது இவர்கள் அடிக்கும் சிக்சர்களை பார்வையாளர்கள் கேட்ச் பிடித்தாலும் "அவுட்" என்ற ஒரு புது விதியை அறிமுகப்படுத்தி இவரின் சாதனைகளை பிற்படுத்தப்பட்ட ஒருவர் மிஞ்சும் வரையிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.
குற்றச்சாட்டு No 4
ஒவ்வொரு மேட்சிலும் ஒவ்வொரு 100 ரன்களுக்கும் 100 குழந்தைகளுக்கு கிரிக்கெட் உபகரனங்கள் வழங்கப்பட்டன, ஆனால் அதில் கோட்டா சிஸ்டம் கடை பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை.இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டு அரங்கிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பட்டியல் இனத்தவர், மலை ஜாதியினர் என்ற விகித்தாசாரத்தில் வழங்கப்படிருக்க வேண்டும். இந்த மண்ணின் சட்ட திட்டங்களை மதிக்காமல் ஐசிசி நடந்துகொன்டு உள்ளது. அதனால் இடஒதுக்கீடு , முறைப்படி பகிர்ந்து அளித்து, இந்த தவறுக்காக இட ஒதுக்கீட்டு முறையில் கிட்டுகள் வழங்கப்படு அந்த சிறுவர்களை தேர்தெடுத்து ஆஸ்திரேலியாவிற்கு பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.
Allegation No 5
ஹர்யானா ஜாட் இனத்தை சேர்ந்த கபில் தேவை உலக கோப்பை இறுதிக்கு அழைக்காமல் ஐசிசி அவமானப்படுத்தியுள்ளது . இந்த தவறை சரி செய்ய ரிச்சர்டு ஹாட்லிக்கு சர் பட்டம் வழங்கப்பட்து போல் கபில் தேவிற்கும், "ஸர்" பட்டம் வழங்க வேண்டும். ஹரியானா ஜாட் இனத்திற்கு இந்த அவமானத்தை குஜராத்தின் உயர்குடியான "ஷா" க்கள் திட்டமிட்டே நடத்தியிருக்கக் கூடும்.முடிவுரை :
இந்தியாவில் அதிக வருமானம் வருவதால், ஐசிசி இனிமேல் இங்கு போட்டிகள் நடத்தும் போது இந்தியாவின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு உட்படுவோம் என்ற உத்திரவாதத்தை எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும்.
முடிவாக, ஐசிசி, இனி நடத்தும் அனைத்து போட்டிகளிலும் இந்திய இடஒதுக்கீடு முறை பின்பற்றி சமூக நீதிக்கு வித்திட வேண்டும். இது போல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எவரேனும் வேறெந்த நாட்டிற்காக விளையாடினாலும் அவர்களும் இந்த ஜாதி வாரி இடஒதுக்கிடு கிடைக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த முறையை ஏற்கனவே அமுல்படுத்த தொடங்கி மிகவும் பிறபடுத்தப்பட்ட யாதவ இனத்தை சேர்ந்த திரு சூர்ய குமாரை டி20 அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளது. தன் பெயரிலேயே ராகுல் மற்றும் திராவிடத்தை குறிக்கும் பெயரும் இருப்பதால் அணியின் பயிற்சியாளராக திரு. ராகுல் டிராவிடை நிரந்திர பயிற்சியாளராக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயல் ஐயரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவையோ அல்லது முகமது ஷமியையோ நியமிக்க வேண்டும்.பி.கு. : இது ஒரு வரைவு கடிதம் மட்டுமே. 2024 பொது தேர்தல் முடிந்த பின் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கீடு செய்தபின் நாங்கள் ஜாதி ரீதியாக தகுதியுள்ள இந்திய அணியை அறிவித்து தங்களுக்கு முழு கடிதத்தையும் அனுப்பிகிறோம்.
இப்படிக்கு
இந்திய பிற்போக்கு ஜாதி சங்கங்களின் கூட்டமைப்பு.
பழைய தில்லி -506969
No comments:
Post a Comment