இந்தியா விடுதலை அடைந்து இன்னமும் ஜாதி அரசியல் மற்றும் ஜாதி ரீதியான வன்முறைகள் குறைந்தபாடில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி விடுதலை அடைந்த 10 ஆண்டுகளுக்கு அனைத்து சாதிப் பிரிவுகளும் சமமான சமுதாய அந்தஸ்து பெற இட ஓதுக்கீடு தேவை என தீர்மானிக்கப்பட்டு சட்ட வல்லுனர்களால் 10 ஆண்டுகளுக்கு மட்டும் சாதி வாரி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அரசியல் அமைப்புகள் உருவாகி இட ஓதுக்கீடு 50% வரை அநேக மாநிலங்களிலும் தமிழ் நாட்டில் மட்டும் 69 % இட ஓதுக்கீடு அமலில் உள்ளது.
இட ஓதுக்கீடு அளிக்கப்பட்ட நோக்கம் சாதியினால் தாழ்த்தப்பட்டவராக கூறப்பட்ட சமூகத்தினரும் முன்னேறி அனைத்து சாதியனரும் சமுதாயத்தில் சம அந்தஸ்து அங்கீகாரம் பெற்று சமுதாயத்தில் அனைவரும் ஓற்றுமையாக வாழ வேண்டும் என்பதே.
ஆனால் இன்றைய நடைமுறை நிலைமை என்ன ? ஒரு குழந்தை வெறும் ஐந்து வயதிலேயே உன் சாதி என்ன என்ற கேள்வியுடனே பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சாதி இல்லை என்று உதட்டளவில் கூறிக் கொள்ளும் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலில் சீட்டு ஒதுக்கும் போது சாதி செல்வாக்கு அடிப்படையிலே மட்டுமே இடம் ஓதுக்கப்படுகிறது.
75 வருடத்திற்கு முன் என் தாத்தா தாழ்த்தப்பட்டவராக நடத்தப்பட்டார் என்பதற்காக இன்றைக்கு இந்த அரசியல் கட்சிகள் சொல்லுவது உண்மையாக இருந்தால் இந்நேரம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டு இன்றைய சிறுவர்கள் ஜாதி ரீதியான பாரபட்சத்திற்கு ஆளாக வாய்ப்பில்லை. அந்த நிலை உண்மை என்றால் இன்றைய சிறுவர்களுக்கு இட ஓதுக்கீடு தேவையில்லை. இல்லை சாதி வேறுபாடு இன்னமும் நடைமுறையில் இருக்கிறதென்றால் சாதி ரீதியான இட ஓதுக்கீடு சாதித்தது என்ன ???
இட ஓதுக்கீடு மூன்று தலைமுறைக்கு பெற்ற பின்பும் ஒரு தலைமுறைக்கு கூட எங்கள் அடுத்த தலைமுறைக்கு இனி சாதி சான்றிதழ் தேவையில்லை கூறும் துணிவு இருக்கிறதா ??? கல்வியில், வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் என அனைத்திலும் இட ஓதுக்கீடு அளித்தும் ஒரு சமுதாயத்துக்கோ அல்லது ஒரு சாதி பிரிவினருக்கோ தன்னம்பிக்கை வரவில்லையென்றால் அந்த இட ஓதுக்கீடு சாதி பிளவை அதிகரிக்கரிக்கிறது என்று தானே பொருள்.
இந்த இட ஒதுக்கீடு கொள்கைக்கு வெளியே சில சாதியரை மட்டும் முற்படுத்தப்பட்டோர் என்று கூறி அவர்கள் 99.99% சதவிகிதம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காத அளவிற்கு இந்த நாட்டில் சமூக நீதி நிலவுகிறது. இதனால் அந்த வகுப்புகளை சேர்ந்த பல மாணவர்களும் தங்கள் திற்மையால் பேரும் புகழும் பெற்று பல நாடுகளிலும் உயர் பதவிகளுக்கு போக முடிந்தாலும் ஆனால் இங்கு விட்டு விட்டு சென்ற பெற்றோர்களின் இறுதி சட்ங்கிற்கு கூட வர முடியாத அவல நிலைக்கு இந்திய இட ஒடுக்கீடு முறை பல கோடி இந்தியர்களை வெளிநாடுகளில் தஞ்சம் அடைய செய்துள்ளது.
இந்தியர்கள் அதிலும் பொது பிரிவினர் தங்கள் திறமையை அரசாங்க வேலைகளில் காட்ட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதனால் பல நாட்டுகாரர்கள் மத்தியில் தங்கள் திறமையினால் மட்டுமே போராடி உயர் பதவிகளுக்கு உயர்ந்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி வெளிநாடுகளில் நமது நாட்டின் பெருமையையும் தங்கள் திறமையினால் நிருபிக்கிறார்கள்.இதனால் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் கூட சாதி சான்றிதழால் பள்ளிக்கு ஆசிரியர்களாக தாங்களே கற்றுக் கொள்ளாததை மாணவர்களுக்கு போதிக்க முயன்று தாங்களும் தோற்று மாணவர்களையும் தோல்வியுற செய்து, மாணவர்கள் அரசு பள்ளிகளை தவிர்க்கும் நோக்குடன் தனியார் பள்ளிக்கு நோக்கி படை எடுக்கிறார்கள். அதிக சம்பளம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர் சொல்லி தர முடியாததை குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களால் எப்படி சொல்லி தர முடிகிறது ????சமத்துவ சமுதாயம் அமைய என்ன செய்ய வேண்டும் ??
அதுவும் தவிர மலைவாழ் மக்களை , காட்டு வாழ் மக்களை, உழவர்கள் பற்றிய பார்வை மாற வேண்டும். இவர்களின் பாரம்பரிய அறிவை இயற்கையை குறைவாக நுகர்ந்து வாழும் அற்புத கலையை கற்க வேண்டும். அவர்களுக்கு ஏதோ நகரவாசிகளை விட நாகரீகம் குறைவானவர்களாக கருதாமல் அவர்களை போற்றி வாழ்ந்தால், நாம் புவி வெப்பமயமாதல் அதன் தொடர்ச்சியாக பேரிடர்களை தவிர்க்க முடியும்.