A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Tuesday, October 31, 2023

TN NO 1 Drunkards Road accidents தமிழ்நாடு முதலிடம் குடிகாரர்கள் சாலை விபத்துகளில்

 


இன்று நவம்பர் முதல் நாள் 2023 பிறந்த வேளையில் இரண்டு தினசரிகளில் வந்த தலைப்பு செய்திகள் தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையின் யதார்த்த நிலையை பிரதிபலிக்கிறது. 

தினமலரில் வந்த கட்டுரை https://m.dinamalar.com/detail-amp.php?id=3471222  தமிழ் நாட்டில் குடிமகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டதை சொல்கிறது.

தினத்தந்தியில் வந்த தலைப்பு செய்தியோ நாட்டிலேயே https://www.dailythanthi.com/News/India/india-sees-119-jump-in-road-accidents-in-2022-tamil-nadu-tops-the-list-of-nh-mishap-1081135  சாலை விபத்துகளில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது என்கிறது.

தமிழ்நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் குடிமகர்களையும் ( குடிமகன் என்று அழைத்தால் சில அமைச்சர்களுக்கு கோவம் வருகிறது ) சாலை விபத்துகளையும் மக்கள் தினம் தினம் ஒவ்வொரு சாலையிலும் சந்திக்க வேண்டி உள்ளது. 

அதுவும் சாலை விபத்துகளில் காவல்துறை வழக்கு பதிந்த எண்ணிக்கை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஆனால் சாலைகளில் பல இடங்களில் பாதசாரிகளின் மீது மோதி காயம், எலும்பு முறிவு, உள்காயங்கள் ஆகிய விபத்துகள் , பைக்குகள் மோதி, கார்கள் மோதிக் கொண்டு நடக்கும் விபத்துகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. 

சாலைகளில் மிகத் தெளிவான மனநிலையில் இருப்பவர்களே பல விபத்துகளை ஏற்படுத்தும் போது, சாராய , கஞ்சா போதைகளில் இருப்பவர்கள் எப்படி செயல்படுவார்கள் ?? போதையும் அதில் வேகமாக ஓடும் வாகனங்களும் விபத்துகளுக்கு மூலக்காரணமாகும்.

இதில் நமது நாட்டில் சாலைகளின் தரம் அதை போடும் காண்டராக்டர்கள் மனம் போல் குண்டும் குழியுமாக உள்ளன. இதில் சாலையை குனிந்து பார்த்தவாறே எதிரில் வருபவரையும் பார்த்து ஓட்டுவது மிகப் பெரிய சவாலே. 

இதற்கு அரசியல்வாதிகள் பெரிய மனது வைத்தால் தான் தீர்வு. சாலைகள் போடுவதிலும், சாராய ஆலைகள் நடத்துவதிலும் கிடைக்கும் பெரும் இலாபத்தை மட்டுமே மனதில் வைத்து செயல் படுவதால் குற்றங்கள் பெருகுகின்றன். பொது மக்களின் மீது கொஞ்சம் இரக்கப்பட்டு தங்களின் அபரிமிதமான இலாபத்தை குறைத்துக் கொண்டு சாராய உற்பத்திக்கு டார்கெட் வைக்காமல் சாலை விபத்தை குறைக்க டார்கெட் வைத்து செயல்பட்டால் மட்டுமே பொது மக்களாகிய நாம் அனைவரும் சாலை விபத்துக்களை சந்திக்க வேண்டிய வாய்ப்புகள் குறையும்.




இதுவும் தவிர இன்னொரு மிகப் பெரிய பூதம் அதி வேகமாக இயக்கப்படும் வாகனங்கள். மிகப் பெரிய நெடுஞ்சாலைகளிலேயே 70 கிமீ-மணிக்கு வேகம் அதிகபட்ச நிர்ண்யிக்கப்பட்ட வேகமாக உள்ளது. ஆனால் தினம் தினம் சாலையில் அறிமுகப்படுத்தப்படும் வாகனங்களில் 250 கிமீமணி - 400 கிமீமஅணி வேகத்தில் செல்ல முடியும் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியா முழுமைக்கும் "அதீத வேகமே" அதிக விபத்துகளின் மூலக் காரணமாக கடந்த ஆண்டின் ஆய்வறிக்கை கூறுவதாக இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பு செய்தி https://www.newindianexpress.com/nation/2023/nov/01/overspeeding-major-cause-of-road-accidents-in-2022-2628900.html பயமுறுத்துகிறது.  அரசாங்கம் ஏன் அதிவேக வாகனங்கள் தயாரிக்க அனுமதிக்கிறது என்று புரியவில்லை. 70 கிமீ மேல் வேகத்தில் போகக் கூடாது என்று சொல்லும் அரசாங்கம், குடித்து விட்டு ஓட்டக் கூடாது என்று சொல்லும் சட்டம் எப்படி இவற்றை தயாரிக்கும் ஆலைகளை அனுமதிக்கிறது ????




அதிவிரைவு வாகனத்தில் குடிபோதையில் ஓட்டப்படும் வாகனம் மிக அதிக விபத்துகள் ஏற்படுத்துகிறது என்று அரசாங்கமே சொல்லிவிட்டு, இலஞ்சம் பெற்றுக் கொண்டு லைசன்ஸ் கொடுத்து, ஊழல் செய்து சாலைகள் போடப்படும் நாட்டிலே, போதை பழக்கம் பெருகி, அதிவேகத்தில் சாலை விபத்து பெருகி வரும் நாடு எப்படி வளர்ச்சி அடைந்த நாடாகும் ? பாதசாரிகள் நடக்கவே முடியாத அளவில் சாலை வசதிகள். வாகனத்தில் செல்வதே கௌரவம் என்ற எண்ணப்போக்கை வளர்ந்து வருகிறது. 

சக உயிர்களின் மேல் அக்கறையில்லாத அலட்சியமான மனபோக்கை உருவாக்கும் சமுதாயம் எதை வைத்து வளர்ச்சி அடைந்துள்ளது என்று அளவிடுவது ???

சகிருட்டிஸ்
Sakritease Nov 2023








Monday, October 30, 2023

துக்ளக் மாற்று கருத்தையும் வெளியிட்டது Thuglak publishes Counter views too


கடந்த வாரம் துக்ளக்கில் வந்த ஒரே பாலின் திருமண தொடர்பான தலையங்கத்திற்கு, நமது மாற்றுக் கருத்தான "ஒரே பாலின திருமணம் காலத்தின் கட்டாயம்" என்று கட்டுரையை
https://sakri-tease.blogspot.com/2023/10/same-sex-marriage-is-social-necessity.html துக்ளக் ஆசிரியருக்கும் அனுப்பியிருந்தோம். அதனை இன்றைய இதழில் ( 8.11.2023 தேதியிட்ட ) பிரசுரித்திருக்கிறார்.

அதனையும் துக்ளக் பாரம்பரியப்படி மாற்றுக் கருத்தினையும் பதிவிட்ட துக்ளக் ஆசிரியர் திரு எஸ் குருமூர்த்தி அவர்களுக்கு நன்றி. தன் எழுத்தால் நம்மை போன்ற பலரையும் எழுத தூண்டிய எழுத்துலக ஆசான் துக்ளக் நிறுவனர் திரு. சோ அவர்களின் ஆளுமையையும் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

சகிருட்டிஸ்
31.10.2023

 

Tuesday, October 24, 2023

ஒரே பாலின திருமணம் காலத்தின் கட்டாயம் Same sex marriage is a social necessity

கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற வழக்கு வந்தது. அதனை நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்றி அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஒதுங்கி கொண்டது.
இத்தகைய ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்வது சட்டப்படி சரியா ? தவறா ? இயற்கை முறைப்படி சரியா ? தவறா ? என்ற விவாதம் பல சமூக தளங்களில் ஓடிக் கொண்டுகிறது.

சமுதாயம் , பண்பாடு, பாரம்பரியம், மதம் என்று பல நடைமுறை வழக்கங்கள் படியும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்வதையே அங்கீகரிக்கிறது. 

ஆனால் நமது சமூக கட்டமைப்பில் பல மாற்றங்கள் நடந்து வருவதை நாம் அனைவரும் கவனித்தே வருகின்றோம்.

1. மனம்:  மனிதம் என்ற சொல்லே "மனம்" என்ற சொல்லின் விரிவாக்கம் தான். 
நமது எண்ணங்களின் பல விதமான எண்ண அலைகளின் மூலமாக தான் இந்த உலகின் பல இயக்கங்களும் நடந்து வருகின்றன.  இன்றைய சூழ்நிலையில் இந்த பூமியில் பல மக்களுக்கும் வாழ்க்கை பெரும் சவாலாக இருக்கிறது. 
சில நாடுகளில் போர் சூழ்நிலையில் தவிக்கிறது. 
பல நாடுகளில் ஊழல் தலை விரித்தாடுகிறது. 
பல நாடுகள் பொருளாதாரத்தில் தத்தளித்து வருகின்றன.
பல நாடுகளில் பட்டினி தலை விரித்தாடுகிறது. 
இது தவிர இயற்கை சீற்றங்களால், நோய்களால், விபத்துகளால், விஞ்ஞான விபரீதங்களால் பல உயிர்களுக்கும் இந்த பூமி நிலையற்ற வாழ்க்கையை ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்க்கிறார்கள். பல தம்பதிகளுக்கு குழந்தைகள் பிறப்பதில்லை. 

 2. உணவு மனிதர்களை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு உணவிற்கு உள்ளது. நாமெல்லாம் தரமான உணவு உட்கொள்கிறோமா என்றால் இல்லை என்பதே யதார்த்தம். உணவு விதைகளை கூட இன்று மரபணு மாற்றப்பட்டுத்தான் வருகிறது. மரபணு மாற்றப்பட்ட விதையினால் உண்டான செடியில் இருந்து நாம் நேரடியாக பாரம்பரிய விதைகளினால் உண்டான செடிகளில் எடுத்துக் கொள்வது போல் விதைகளை எடுக்க முடியாது. ஏனென்றால் மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் மலட்டு விதைகளே வரும். இந்த தானியங்களையும் தாவரங்களையும் உட்கொள்பவர்கள் மலட்டுத்தன்மையே
https://sustainablepulse.com/2014/01/15/gm-bt-corn-causes-infertility-rats-new-egyptian-studies/

அடைவர். 

இன்று பல ஊர்களிலும் மாடுகளும் சினை ஊசி போடப்பட்டே கருவுருகின்றன. அதனால் இன்றைய தலைமுறை பல பசு மாடுகளும் காளையுடன் சேருவது என்றால் என்னவென்றே தெரியாது. இயற்கையில் எல்லா உயிரினங்களும் ஒரு ஆண் உயிரும் பெண் உயிரும் இணைவதன் மூலமே உயிர் இனப் பெருக்கம் ஏற்படுகிறது. ஆனால் இன்று மனிதனின் தேவைக் கேற்ப மாடுகளில் பெண் மாடுகள் மட்டுமே, கோழிகள் என்றால் பெட்டை கோழிகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இதில் நமது அரசாங்கங்கள் மிகப் பொறுப்பாக ஊசியிலும் கூட "பெண் சிசு"க்கள் மட்டுமே பிறக்கும் படியாக விவசாயிகளுக்கு மாடுகளுக்கு சினை ஏற்ற  வழங்கி வருகிறார்கள். 

மனிதர்களிலும் நாய்களிலும் மட்டும் "ஆண் வாரிசு" வேண்டும் என்று மனிதர்களாகிய நாம் தீர்மானித்து விட்டோம். 

பசு மாடுகள் தான் பருவத்திற்கு வந்து விட்டேன் என்று காளைக்காக குரல் எழுப்பும் போது அங்கே ஒரு மனிதனின் கை ஊசியுடன் அதன் கர்ப்பபையை தொடுகிறது. அப்போது பசுவிற்கு கூடி குலாவ வேண்டிய காளை எங்கே ??? 

காளைன்னா என்னங்க ???
அதனால் அந்தப் பசுக்கள் பலவும் அதன் அருகில் இருக்கும் பசுக்கள் இடம் மட்டுமே உரசி நிற்க வேண்டும். பிராய்லர் கோழி வாழ்வதே 65 நாட்கள் தான் அதற்குள் அதற்கு பருவம் வந்ததா இல்லையா என்று தெரியாமல், சேவல் என்றால் என்ன வென்றே தெரியாமல் அதற்கு எடை பார்க்கப்பட்டு மாமிசத்திற்காக கொல்லப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் பசுவின் பாலையும், கோழியின் முட்டையையும் கறியையும் தின்னும் மனிதர்களுக்கு என்ன உணர்ச்சி வரும். அதுவும் மாடுகளுக்கு பிள்ளை பிறக்காமலே கூட பால் கறக்க ஊசி, கோழிகளுக்கு எடை கூட பல "ஆண்டிபயாடிக்" ஊசிகள். அப்போது இதை தின்பவர்களுக்கு  மட்டும் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் வரும் ???  

இயற்கைக்கு முரணான 'ஆண்டிபயாடிக்" - "பயாடிக்" என்றால் என்ன ? உயிராற்றல்.  "ஆண்டிபயாடிக்" உயிராற்றலற்ற.  அப்போது இத்தைகய இயற்கைக்கு முரணான கலவைகளால் உணவுகளை மனிதன் உண்பதால் இரசாயன இயக்கத்தினால் இயங்கும் மூளையும் இந்த செயற்கை இரசாயங்களால் மாற்றம் ஏற்பட்டு " ஆண்டிக்கு -ஆண்டியையும் " "அங்கிளுக்கு அங்கிளைத்தான்" பிடிக்கிறது. 

3. நகர வாழ்க்கை முறை

இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் பெரும்பாலும் நகரத்தை நோக்கி நகர துவங்கி விட்டோம். கிராமங்களில் மக்கள் வாழ்ந்த வரை பல குழந்தகளை பெற்றெடுத்தார்கள். ஆனால் நகரங்களில் வாழ்க்கையில் இட நெருக்கடி தான் அடிப்படையே. அதனால் நகரமயமாக்கல் அதிகமாக அதிகமாக குழந்தைகளின் எண்ணிக்கை குறைய துவங்கியது.  இட பற்றாக்குறையே அனைத்தையும் தீர்மானிக்கிறது.  பல மனிதர்களுக்கு இந்த நகர வாழ்க்கையில் எதற்காக ஓடுகிறோம் யாருக்காக ஓடுகிறோம் ?? என்ற கேள்விகள் வாட்டுகிறது. வந்தோம் , வாழ்ந்தோம், பிள்ளை பெத்தோம் , செத்தோம் என்பதற்காகவா இந்த வாழ்க்கை என்ற சலிப்படைய செய்கிறது. விரக்தி ஏற்படுகிறது. 

அரசாங்கமும் மறைமுகமாக மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க "நாமே இருவர் நமக்கெதுக்கு ஒருவர்"  என்ற சிந்தனை மேலோங்க வைக்கும் விதமாக - தண்ணீரில் க்ளோரின், உப்பில் அயோடின் என்று விதவிதமாக மக்கள் தொகையை கட்டுபடுத்திவிட்டது.  

இதுவும் தவிர குழந்தை பெற்றுக் கொள்பவருக்கும் அந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை, மன வளர்ச்சி இல்லை, ஆட்டிசம், ஹைபர் ஆக்டிவ், உடல் ஊனங்கள் என்று முத்திரையிடப்பட்ட பல தரப்பட்ட குழந்தைகள், அவர்களை வளர்க்க பெற்றோர் படும் பாடும்.

இதையும் தாண்டி வயதான பாட்டிகளை இளம் போதை வாலிபர்கள் பலாத்காரம் செய்வதும், இளம் சிறுமியரை வயதான தாத்தாக்கள் கர்ப்பமாக்குவதும் என்ற அவல செய்திகள் தினம் தினம் அலறுகின்றன.

பிள்ளை பெறுவதற்கு உகந்த சூழல் இல்லை, உடலுக்கு ஊட்டமில்லை, மனதில் திருப்தி இல்லை என்னும் போது உங்கள் வாழ்க்கை துணை ஆணாக இருந்தா என்ன ? பெண்ணாக இருந்தா என்ன ?? 

மனதையும் உடலையும் காயப்படுத்தாத ஒரு துணை போதும் என்று தானே நினைக்க தோன்றும். 

அதனால் ஒரே பாலின திருமணம் காலத்தின் கட்டாயம். 

( அதிலும் "கட்டாயம்" என்ற சொல்லை பயன்படுத்துவது கூட "கட்டாயமில்லை" என்றே நினைக்க தோன்றுகிறது )

4.  பிரபஞ்சம் - இதையும் தாண்டி ஒரு தூர பார்வையில் பார்க்கும் போது இந்த பிரபஞ்சத்திற்கும் இந்த மனிதன் என்ற உயிரினத்தை படைத்து செய்த ஆராய்ச்சி செய்து செய்து மிகவும் சலிப்பு ஏற்பட்டு விட்டதோ ??? அதனால் தான் மனிதர்களால் பூமிக்கு ஏற்படும் தொல்லைகளை கருத்தில் கொண்டு மனிதர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டதோ ???

-சகிருட்டிஸ்

Sakritease Oct 2023