எங்கே போகிறாய் தமிழகமே ????

 

இன்று 27.1.2.2024  தமிழ் நாட்டு மக்களின் மனநிலை -நம்மால நடப்பது எதையும் தடுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது என்ற கையாலாகாத நிலைமை தான். 

சுமார் நாலு வருடத்திற்கு முன் தான் ஐ.பி.எஸ் கஷ்டப்பட்டு படித்து, உயர் பதவிகளுக்கு போய் நல்ல பெயர் வாங்கி, மக்களால் பாராட்டு பெற்ற பின், எனது மாநில அரசியல் நிலை மாற வேண்டும் என்று உயர் போலிஸ் அதிகாரி என்ற பதவி, வேலை, சம்பளம் என்று அனைத்தையும் உதறிவிட்டு ஒருவர் அரசியல் களத்தில் குதித்த போது, அரசியல், சினிமா, கிரிக்கெட் சம்பந்தமில்லாமல் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்ற ஆர்வம் மக்களுக்கு ஒரு மாற்றம் வரும் என்ற ஆசை தோன்றியது. 

2021 சட்டசபை தேர்தல் 2024 மக்களவை தேர்தல் தோல்விகள் திரு அண்ணாமலையை மிகச் சோர்வடைய செய்து இன்று தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டு போகும் அளவிற்கு மன விரக்தி அடைந்துவிட்டாரா ? என்ற கேள்வி நேர்மை விரும்பும் பல அப்பாவி கையாலாகாத மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. 


கடந்த 50 வருட கால அரசியல் என்பது அடியாள் பலம் கொண்ட சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இங்கு அரசியல் செய்ய முடியும் என்ற நிலை தான் நிலவுகிறது. இன்று தமிழ்நாட்டில் யாரும் யாரையும் நம்பக் கூடிய நிலையில் இல்லை. பெற்ற தாய் தந்தையரே தங்கள் பிள்ளைகள தாங்கள் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்றால் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை தான் உள்ளது.

இதுவும் தவிர கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கந்து வட்டி, போதை பொருட்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இந்த நேரம் காவல் துறையில் நேர்மையாக யாரேனும் வேலை பார்த்தால் அவர்கள் கையாலாகாத நிலைக்கு தங்களை தாங்களே அடித்து கொள்ள தான் முடியும்.

ஆனால் அதை ஏன் காவல் துறை விட்டு விலகிய காவலாளர் செய்ய வேண்டும் ???

"மன்னன் எவ்வழி. மக்கள் அவ்வழி "

இன்று ஆட்சி செய்யும் மன்னர்கள் பலரும் மக்கள் தங்களை தாங்களே சட்டையை கிழித்து கொண்டு அலையும் அளவிற்கு தான் ஆள்கிறார்கள். பெரும்பாலான மக்களும் பணத்தின் வாசனைக்கு மட்டுமே கட்டுபட்டவர்கள் போல் நடந்து கொள்வதால், இந்த ஊழல் மிகு சமுதாயத்தை தேர்தல் கொண்டு மாற்ற முடியுமா என்ற நம்பிக்கையை ஓட்டுக்கு பணம் நடைமுறை மாற்றி விட்டது.

இதனால் மக்கள் மனதளவில் ஒரு விரக்தியுடன் நடை பிணம் போல் தான் வாழ்கிறார்கள். ஓட்டிற்கு லஞ்சம் வாங்கிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி வேறு சில பேருக்கு. 

இதில் சில அம்பிகள் மட்டும் அவ்வப்போது "அன்னியன்" ஆகிவிடுகிறார்கள். 


"வாங்க வாங்க மணியாச்சி. சீக்கிரம் போய் படுக்கலாம். இவன் இப்படி தான் தேவை இல்லாம எதையாவது எழுதுவான் " என்று அங்கலாய்பவர்களுக்கு ஒரு நற் செய்தியை படித்து விட்டு நல்லா தூங்குங்களேன். ( "நீங்க தூங்கி எழுந்ததால மட்டும் விடிஞ்சுடவா போகுது" மைன்ட் வாய்ஸ் )



ஒரு நல்ல சேதியை கொளுத்தி போடுவோம் :

ஓரு ஆன்மீக பெரியவர் 2021 தேர்தல்ல திமுக வை திட்டி வந்தவர். ஆட்சிக்கு வரக் கூடாதுன்னு விரும்பியவர். ஆனால் அவர் விருப்பத்துக்கு மாறா அவங்க ஆட்சிக்கு வந்ததும் அவர் வணங்கும் கடவுளிடம் கேட்டிருக்கிறார் "நாங்கள் எல்லாம் எவ்வளவு விரும்பியும் இப்படி செய்யலாமான்னு கேட்டிருக்கிறார்?" அதற்கு அந்த கடவுள் " சட்டையை கிழிச்சு கிட்டு அவர் ஓலமிட்டதால் அவர வர வெச்சேன். முன்னாடி அந்த அம்மா "தலைவிரி" கோலமா சட்டசபையில் சபதம் போட்ட போதும் அதனால் தான் அவங்கள் வர வச்சேன்" சாமி👦👦 சொல்லிடுச்சாம்.


இதனாலேயே அறிவு பூரவமா பேசி இந்த மக்கள் கிட்ட ஓட்டு வாங்க முடியாதுன்னு முடிவெடுத்து , ஒரு உணர்ச்சி பூர்வமா இவங்கள உசுப்பி விட்டு பாப்போம்' னு 

சட்டயை கழட்டி விட்டார், 

சாட்டையை சுழற்றி விட்டார்,

செருப்பை கழட்டி விட்டார்.  

அப்ப இந்த கட்டுரையை மற்ற எதிர்கட்சிகாரங்களெல்லாம் படிச்சிட்டா என்ன ஆகும் ? அப்பறம் அவங்க எல்லாம் எதை கிழிச்சுக்கலாம்னு திட்டம் போட ஆரம்பிச்சுடவாங்களே. அதனால மக்களே ! இந்த கட்டுரையை படித்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கோ, விஜய்கோ, சீமானுக்கோ அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 


                                                          சகிருட்டிஸ் 27.12.24

                                                   Sakritease December 2024

 

Comments

Post a Comment

Welcoming you to the world of sakritease. Your comments on our blog posts are highly appreciated. Feel free to express yourselves. At the same time, we expect decent language even in criticism
சகிருடிஸின் உலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களின் மேலான கருத்துக்களை, விமர்சன்ங்களாக இருப்பினும் மிகவும் பதமான சொற்களை கொண்டு வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்